என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? முக்கிய கேரக்டர் அவுட். பெண்கள் எடுத்த முடிவு.

0
464
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இதை அறிந்து குணசேகரன் கோபப்படுகிறார். பின் கடந்த வாரம் எபிசோடில் அப்பத்தா விழாவை ஏற்பாடு செய்து தான் ஆரம்பிக்கும் புதிய டிரஸ்ட் குறித்து பேசினார். அதற்கு பொறுப்பாளராக ஜீவானந்தத்தை நியமிக்கிறார். இதையெல்லாம் பார்த்து குணசேகரனும், கதிரும் கடுப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். பின் அப்பத்தா திடீர்னு மயங்கி விழுகிறார். எல்லோரும் பதட்டத்தில் இருக்கும் போது குணசேகரன், ஞானம், கதிர் மட்டும் அப்பத்தாவை ஹாஸ்பிடலுக்கு அழைக்க செல்கிறேன் என்று செல்கிறார்கள். ஆனால், அப்பத்தாவை எந்த ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. வீட்டு பெண்களும், ஜனனி, சக்தி ஆகியோரும் ஹாஸ்பிடலில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பத்தா நிலைமை:

பின் விபத்தில் அப்பத்தா இறந்து விடுவதைப் போல காண்பிக்கிறார்கள். அப்பத்தாவின் அஸ்தியை கரைக்க குணசேகரன் ராமேஸ்வரம் சென்றிருக்கிறார். இன்னொரு பக்கம் மொத்த வீடுமே சோகத்தில் சோகத்தில் இருக்கின்றது. பின் ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள். இதை ஆதங்கத்துடன் ஈஸ்வரி வீட்டில் சொல்கிறார். கோபமடைந்த ஞானமும், அவருடைய அம்மாவும் கொந்தளித்து ஈஸ்வரியை திட்டுகிறார்கள். ஆத்திரம் தாங்க முடியாமல் ஈஸ்வரி, உங்கள் மகன்கள் தான் இரண்டு கொலை செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

உண்மையை சொன்ன ஈஸ்வரி:

ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தது உங்களுடைய மகன் தான் என்று போட்டு உடைக்கிறார். வீட்டில் உள்ள பெண்களும் கதறி எழுது உண்மையை சொல்கிறார்கள். ஆனால், ஞானமும் அவருடைய அம்மாவும் அதை நம்பவில்லை. அடுத்த நாள் வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விசாலாட்சியின் தம்பி, இது கடவுள் தந்த மரணம் மாதிரி தெரியவில்லை. மனிதர்கள் கொடுத்த மரணமாறி தான் தெரிகிறது என்று சொல்கிறார். இதை வீட்டில் உள்ள எல்லோருமே கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். சக்தி- ஜனனி சந்தேகப்பட்டது போல் இது அப்பத்தா திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார்கள் என்று உறுதியாகி இருக்கிறது.

வீட்டில் நடக்கும் கலவரம்:

இப்படி இருக்கும் நேரத்தில் குணசேகரன் வீட்டிற்கு அப்பத்தாவின் அஸ்தியை எடுத்துக் கொண்டு வருகிறார். அவர் அப்பத்தாவிற்கு மரியாதை செலுத்த நினைக்கிறார். ஆனால், ஜனனி தடுக்க பார்த்து இருவருக்கும் சண்டை முற்றுகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஈஸ்வரிக்கு கல்லூரியில் இருந்து வேலை செய்வதற்கான ஆர்டர் கிடைக்கிறது. அதை வாங்கி படித்து குணசேகரன் முறைக்கிறார். வீட்டில் உள்ள பெண்களும் அமைதியாக நிற்கிறார்கள். பின் யார் என்ன செய்தாலும் நான் என் முடிவில் தெளிவாக இருக்கிறேன் என்று ஈஸ்வரி செல்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இன்னொரு பக்கம் ஞானம், குணசேகரன், கதிர் நின்று கொண்டிருக்கும்போது கரிகாலன் வருகிறார். அப்போது கரிகாலன், யாரோ ஒருவர் சுடுகிறார் என்று சொல்கிறீர்கள். அப்போது துப்பாக்கில் தான் சுடுகிறார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று அப்பத்தாவின் விபத்து குறித்த உண்மையை தெரிந்து கொள்ள பேசுகிறார். என்ன சொல்வது என்று தெரியாமல் பதட்டத்தில் குணசேகரன் நிற்கிறார். இனிவரும் நாட்களில் அப்பத்தாவை குணசேகரன் தான் கொன்றாரா? இந்த உண்மை வெளியே வருமா? அப்பத்தாவிற்கு என்ன ஆனது? ஜனனி சக்தி என்ன செய்யப் போகிறார்கள்? போன்ற அதிரடித்திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement