இதனால் தான் விஷால் இன்னும் நிதி கொடுக்கலயாம் – பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.

0
1202
vishal
- Advertisement -

தற்போது இந்தியாவில் கொரோனாவால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 3435 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் நாடு முழுவதும் பிரதமர் மோடி நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள். பொது இடங்கள், கடைகள்,கோவில்கள், படப்பிடிப்பு எல்லாம் மூடப்பட்டு உள்ளது. மேலும், ஊரடங்கினால் வருமானம் இல்லாமல் ஏழை மக்கள், தினந்தோறும் கூலி வேலையும் செய்யும் மக்கள் என பல பேர் தவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Actor Vishal & Director RK Selvamani Press Meet On Kollywood ...

படப்பிடிப்புகள் எல்லாம் மூடப்பட்டு உள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதரத்திற்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் மொத்தம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரூ.3.75 கோடி தேவைப்படுகிறது என்பதால் நடிகர், நடிகைகள் அனைவரும் நிதி வழங்க வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

- Advertisement -

இதனை அறிந்த பல நடிகர்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இதுவரை பெப்சி அமைப்புக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர்களை பொறுத்த வரை சிவகார்த்திகேயன்-விஜயசேதுபதி சூர்யா ஆகியோர் தலா 10 லட்சமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சமும், அஜித் 1.25 கோடியும் அளித்திருந்தனர். மேலும் ராகவா லாரன்ஸ் அதிகபட்சமாக 3 கோடி ரூபாயை அளித்திருந்தார்.

ஆர்.கே.செல்வமணி

ஆனால், முன்னாள் நடிகர் சங்க செயலாளராக இருந்த விஷால் இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை. இதனால் விஷால் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நடிகர் விஷால் ஏன் இன்னும் நிதி கொடுக்கவில்லை என்று செல்வமணி கூறியுள்ளார். அதில், முதல் போன் விஷால்கிட்ட இருந்து தான் வந்தது. எல்லாத்தையும் பத்தி விசாரிச்சார். `சில காரணங்களால என்னோட அக்கவுன்ட் ஃப்ரீஸ் ஆகியிருக்கு. எல்லாம் சரியானதும் என்னால முடிஞ்ச நிதியுதவி செய்கிறேன் என்று சொல்லிருக்கார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement