‘போஸ்டர் அடி அண்ண ரெடி’ – மீண்டும் நாயகனாக கவுண்டமணி, டைட்டிலுடன் வெளியான போஸ்டர் இதோ.

0
1478
Goundamani
- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய கவுண்டர்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் ரஜினி, கமல் காலகட்டம் தொடங்கி தற்போது உள்ள நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் தனியாக தான் படங்களில் கலக்கி வந்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.

- Advertisement -

கவுண்டமணி– செந்தில் காம்போ:

அதிலும் கவுண்டமணி– செந்தில் காம்போ எல்லாம் வேற லெவல். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மீண்டும் சினிமாவில் கவுண்டமணி :

இவர் 2016ஆம் ஆண்டில் வெளியான “வாய்மை” என்ற படத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கவுண்டமணி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சினிமாவில் களமிறங்கி விட்டார். இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் “பழனிசாமி வாத்தியார்” என்ற படத்தில் தற்போது கவுண்டமணி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ‘இருந்தது. இந்நிலையில் தற்போது கவுண்டமணி நடிக்க இருக்கும் புது படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது

-விளம்பரம்-

கவுண்டமணி நடிக்கும் புது படம்:

அதாவது ஒத்த ஓட்டு முத்தையா என்ற முழு நேர நகைச்சுவை திரைப்படத்தில் தான் கதாநாயகனாக கவுண்டமணி நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சிசி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. சாய் ராஜகோபால் இந்த படத்தை எழுதி இயக்க இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம்புலி, வையாபுரி, முத்துக்காளை, எதிர்நீச்சல் ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

படம் குறித்து இயக்குனர் அளித்த பேட்டி:

மேலும் இது குறித்து இயக்குனர் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு நகைச்சுவை வசனங்களை எழுதி இருக்கிறேன். நான் பல படங்களில் உதவி, துணை, இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய 25 ஆண்டு கால திரை உலக பயணத்தில் பல படங்களை இயக்கி இருக்கிறேன். அதற்குப் பிறகு நான் ஒத்த ஒட்டு முத்தையா என்ற படத்தின் கதையை கவுண்டமனியிடம் சொன்ன போது அவருக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. உடனே அவர் நடிக்க சம்பந்தமும் தெரிவித்தார். 6 முதல் 60 வயது வரை அனைத்து வயதுகளும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழு நீள நகைச்சுவை திரைப்படம் ஆக இருக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement