காரத்தே ராஜா தமிழில் வில்லன் கதாபாத்திரங்களிலும், சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்து புகழ்பெற்றவர். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பெயர் பெற்றார்.
அதன்பின்னர் விஜயின் கில்லி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், போக்கிரி என பல ஹிட் படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தார். அதன்பின்னர் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று கதையில் உருவான நாடகத்தில் முழுவதும் வீரப்பனாகவே வாழ்ந்து நடித்தார் கராத்தே ராஜா.
கடந்த 2009ஆம் ஆண்டு திவ்யா என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு இவருக்கும் இவரது மனைவி திவ்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திவ்யா வீட்டை விட்டு வெளியேறினார்.
உடனடியாக தன் மனைவியை காணவில்லை என போலீசில் புகார் செய்தார் கராத்தே ராஜா. அதன்பின்னர் மீண்டும் வீடு வந்து சேர்ந்தார் திவ்யா. தற்போது இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு கராத்தே ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தற்போது மன்னர் வகையறா என்ற விமல் படத்தில் நடித்துள்ளார் காரத்தே ராஜா.