சமந்தாவை நேரில் சந்தித்தால் இதைத் தான் செய்வேன் என்று நாக சைதன்யா சொல்லியிருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
சமந்தா- நாக சைதன்யா திருமணம்:
திருமணத்திற்கு பின் இருவரும் வெளிநாடு சுற்றுவது, புகைப்படம், வீடியோ என்று காதல் புறாக்களாக இருந்தார்கள். இதனால் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து கொண்டு இருந்தது.
சமந்தா- நாக சைதன்யா பிரிவு:
இதனை அடுத்து இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார்.
சமந்தா நடிக்கும் படங்கள்:
இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம்.
இவர் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், சாகுந்தலம், யசோதா, குஷி போன்று பல படங்களில் சமந்தா மிரட்டிக் கொண்டு வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அமீர் கான் நடித்துள்ள ‘லால் சிங் தத்தா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
சமந்தா குறித்து நாக சைதன்யா சொன்னது:
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நாக சைதன்யாவிடம், சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், சமந்தாவிற்கு ஹாய் சொல்லி ஹக் (hug) பண்ணுவேன். அதேபோல் என்னுடைய கையில் போட்டிருக்கும் டாட்டூவை போல் என்னுடைய ரசிகர்கள் பலர் போட்டிருப்பதை பார்த்து இருக்கிறேன். எனது திருமண நாளை தான் நான் டாட்டூவாகப் போட்டு இருக்கிறேன். இதனால் யாரும் அந்த டாட்டூவை போட வேண்டாம். ஏன்னா, சில விஷயங்கள் மாறலாம். இல்லை நானே கூட இந்த டாட்டூவை மாற்றலாம். அதனால் நீங்கள் டாட்டூ போட விரும்பினால் நான் போட்டிருப்பது போன்று தயவு செய்து போட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.