நான் அந்த ஆடியோ வெளியிட்டா சிவகார்த்திகேயன் வாழ்க்கையே போயிடும் – சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலத்தின் பேட்டி.

0
571
- Advertisement -

சிவகார்த்திகேயனுக்கு எதிராக ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று பிரபல விமர்சகர் அளித்திருக்கும் பேசிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் சிவகார்த்திகேயன்-இமான் சர்ச்சை அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் டி இமான் அவர்கள் சிவகார்த்திகேயன் குறித்து கூறியிருந்தது, மனம் கொத்தி பறவை, ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை. இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன்-இமான் சர்ச்சை :

அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. இதை குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும். அந்த வலியும் வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறி இருந்தார். இப்படி டி.இமான் வெளிப்படையாக பேசி இருந்தது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அதோடு இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் கூறி வருகிறார்கள்.

மோனிகா அளித்த பேட்டி:

பின் இது குறித்து இமான் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட், சிவகார்த்திகேயன் எங்களுடைய குடும்ப நண்பர் தான். ரொம்ப டீசன்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அவர் எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக்கூடாது என்று சமாதானம் பேசி பஞ்சாயத்து எல்லாம் பண்ணி வைத்திருந்தார். ஒரு குடும்பம் சிதறிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும், நாங்கள் ஒற்றுமையாக வாழனும் என்று நினைத்து தான் சமாதானம் செய்ய சிவா முயற்சிகளை எடுத்தார். அது இமானுக்கு பிடிக்கவில்லை.

-விளம்பரம்-

வலைப்பேச்சு அந்தணன் வீடியோ:

சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று தான் இமான் துரோகம் செய்தாரு என்று சொன்னது எனக்கு புரியுது. ஆனால், அதை வெளியில் வேற மாதிரி புரிஞ்சுகிறார்கள் என்று கூறி இருந்தார். இதனை அடுத்து இமானின் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சிவகார்த்திகேயன் தான் என்றும் கூறி இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், பிறர்மனை நோக்காமை என்று வள்ளுவர் சொன்னதை சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் பலர் மதிக்காதது தான் இதற்கு காரணம்.

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

ஒருவரை நம்பி வீட்டிற்குள் அழைக்கும் போது அதற்கான மரியாதையை அவர்கள் காப்பாற்றி இருக்க வேண்டும். அதேபோல் இமானுடைய முன்னாள் மனைவி சிவகார்த்திகேயன் நல்லவர் வல்லவர் என்று சொல்லும் போதே அவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்று வெட்டவெளிச்சமாக தெரிந்து விட்டது. இந்த விவகாரத்தில் மோனிகா அமைதியாக இருந்திருக்கலாம். அதேபோல் இந்த வீடியோ வைரலாகாமல் இருப்பதற்கும், மீம்ஸ்கள் வெளியிடவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் பெரும் தொகை மாறி இருக்கிறது. இந்த பிரச்சனை தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை எல்லாம் செய்து விட்டார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக யூடியூபில் பேசுபவர்களுக்கு பெரும் தொகையையும் அவருக்கு எதிராக பேசுபவர்களுக்கு youtube சேனலுக்கும் ஸ்டைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது தேவைப்பட்டால் வெளியிடுவேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement