பார்த்திபன் சொன்னது போல இத்தனை கோடி கட்ட வேண்டுமா ? ஜெய் பீம்’ ஆஸ்கர் ரேஸில் இணைய சூர்யா இத்தனை கோடி செலவு செய்தாரா ?

0
639
oscar
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம். படத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இருந்தாலும் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க, திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது. பின் ஆஸ்கரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்கரின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்த முதல் தமிழ் திரைப்படம் ஜெய்பீம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜெய் பீம் படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளது.

- Advertisement -

ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ஜெய் பீம்:

தற்போது 94வது ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் அனுப்பப்பட்ட 276 படங்களில் ஜெய்பீம் தேர்வாகியுள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு சென்றதற்கு சூர்யா 3 லட்சத்து 72 ஆயிரம் அதாவது 5000 டாலர்கள் கொடுத்து தான் ஆஸ்கர் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் இடம் பெற்றிருக்கிறார் என்று பயனர் ஒருவர் விமர்சித்து டீவ்ட் போட்டு இருக்கிறார்.

கேலி செய்த நபர் :

அதில் அவர் கூறி இருப்பது, வெறும் 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாவை கொடுத்து தான் ஆஸ்கர் யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார் சூர்யா. திமுகவினர் போல் மலிவான சந்தைபடுத்தல் தந்திரங்களை சூர்யா பின்பற்ற ஆரம்பித்தாரா? கிராமப்புறங்களில் மருத்துவமனை திறக்க சூர்யா சார் 3 லட்சத்து 72 ஆயிரம் செலவு செய்திருக்க வேண்டும். நான் சொல்வது சரியா ஜோதிகா மேடம்? என்றும் விமர்சித்து டீவ்ட் போட்டு இருக்கிறார். இதைப் பார்த்து பலரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஒத்த செருப்பு படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட போது :

ஆஸ்கர் விருதுகளில் ஒருபடம் தகுதி பெறுவதற்கு, அமெரிக்காவில் இருக்கும் திரையரங்குகளில் அப்படம் குறைந்தகாலம் ஓடியிருத்தல் அவசியம். ‘ஒத்த செருப்பு’ படம் ஆஸ்கரில் இணைவதற்காக அமெரிக்கா சென்று அப்படத்தைத் திரையிட்டார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். ஒரு பட நிறுவனம் 12,500 (அதாவது இந்திய மதிப்பில் 9,12,901 ரூபாய் ) அமெரிக்க டாலர் தொகையை கட்டி, தங்களின் படத்தினை ஆஸ்கர் குழுவுக்கு அனுப்பலாம். அதை ‘Quality Control’ குழு ஒன்று தரம் பார்க்கும். தரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் அந்தப் படம் ஆஸ்கர் ஸ்கிரீனிங் பட்டியலில் இடம்பெறும்.

ஒத்த செருப்பும் பார்த்திபனும் :

அமெரிக்காவில் திரையிடப்பட்ட படம் என்றால் இந்த 12,500 அமெரிக்க டாலர் தேவையில்லை. ஆனால், ஒத்த செருப்பு படத்திற்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை என்று பார்த்திபனிடம் ரசிகர் கேட்ட போது, உள்ளூரிலேயே இவ்வளவு அது வெளிநாட ஆயிரம் இருக்கும், அதற்கு செலவு செய்யவும் என்னால் இயலவில்லை பாப்போம் என்று கூறி இருந்தார் பார்த்திபன். இந்த பதிவை கண்ட ரசிகர் ஒருவர் ஆஸ்காருக்கு செலவு செய்யணுமா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த பார்த்திபன், விசாரிச்சு பாருங்க விசாரனைக்கே 3 1/2 கோடி செலவு செஞ்சாங்க. அப்படி பிரச்சாரம் பண்ணாதான் நாமினேஷனாவது கிடைக்கும் என்றும் கூறி இருந்தார் பார்த்திபன்.

Advertisement