இந்த சனியனுக்கு ஜக்கி ஏதோ வாட்சப்ல அசைன்மெண்ட் மாதிரி அனுப்புவான் போல- காஜலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
51961
kajal
- Advertisement -

கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் தான் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் நடிகை காஜல் ராமாயணம் குறித்து ட்வீட் செய்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

-விளம்பரம்-

தற்போது உலக நாட்டை உலுக்கி வருவது கொரோனா என்ற உயிர்கொல்லி வைரஸ் தான். இந்த கொடிய நோயினால் இதுவரை உலகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவை பொறுத்த வரை இந்த நோயின் தீவிரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 22 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரமால் இருப்பதால் வீட்டில் மிகவும் சலிப்படைந்து வருகின்றனர்கள்.

- Advertisement -

மக்களின் தனிமையை போக்கவும் தற்போது வீட்டில் இருக்கு குழந்தைகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவும் தற்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயண தொடரை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இதன் மூலம் வீட்டில் உள்ள இக்கால குழந்தைகள் நல்ல புராண கதையை கேட்கும் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை காஜல்அகர்வால் டிடி தொலைக்காட்சியில் ராமாயண தொடர் ஒளிபரப்பாகிறது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் அதில் தன்னுடைய குழந்தைப் பருவத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாகவும் ராமாயணம், மகாபாரதம் போன்ற தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது நல்ல விஷயம் என்றும் இதன் மூலம் குழந்தைகள் இந்திய புராணத்தை கற்றுக் கொள்வார்கள் என்றும் பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இதில் காஜல் அகர்வால் ஆங்கிலத்தில் மித்தாலஜி அதாவது புராணம் என்று பதிவிட்டுள்ள வார்த்தையை ஒருசிலர் கட்டுக்கதை என்று புரிந்து கொண்டதால். காஜல் அகர்வால் கண்டமேனிக்கு விமர்சித்து வருகிறார்கள். மேலும், ஒரு சிலரோ குழந்தைகளுக்கு புராணத்தை கற்றுக் கொள்வதற்கு பதிலாக அறிவியல் ரீதியான நிகழ்ச்சிகளை அரசாங்கம் ஒளிபரப்பலாம் என்று கூறி வருகிறார்கள்.

மேலும் காஜல் அகர்வாலின் இந்த பதிவால் ரசிகர்கள் ஒரு சிலர், காஜல் நீ இவ்வளவு பெரிய சங்கினை தெரியாம போயிடுச்சு என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள். மேலும் இதையெல்லாம் தாண்டிய ரசிகர் ஒருவர் என்று பதிவிட்டுள்ளார் அவர் பதிவிடுவதற்கு காரணமும் இருக்கிறது நடிகை காஜல் அகர்வால் ஈஷா யோகா சத்குருவின் தீவிர பக்தை என்பதால் தான். வருடா வருடம் சிவராத்திரி அன்று காஜல் தவறாமல் ஈஷாயோகா பூஜையில் கலந்து கொண்டு விடுவார்.

இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி இரவு சிவராத்திரியை முன்னிட்டு பிரபல சாமியாராக ஈஷா யோகா பூஜை ஒன்றை நடத்தினர். இந்த பூஜையில் ஈஷா யோகாவின் தீவிர பக்தையான காஜல் அகர்வாலும் கலந்து கொண்டார். காஜல் அகர்வால் ஈஷா யோகா நடத்திய பல்வேறு கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால், நேற்று காஜல் அகர்வாலை ஈஷா யோகா முத்தம் கொடுத்து வரவேற்றதாக கூறப்படுகிறது. மேலும், அந்த போட்டோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement