கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.
-விளம்பரம்-
ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது.தற்போது மீண்டும் ஒருவழியாக சீரியல் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டு புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா பிரச்சனையால் பல நடிகர் நடிகைகள் சென்னை திரும்ப முடியாமல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதனால் பல்வேறு சீரியல்களில் புதிய நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி வரும் ‘கல்யாண வீடு ‘ தொடரில் இருந்து ஸ்பூர்த்தி கவுடா திடீரென்று விலகியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய இந்த தொடர் 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த தொடரில் திருமுருகனுக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் என்ற கேரக்டரில் ஸ்பூர்த்தி கவுடா நடித்து வந்தார்.இந்த நிலையில் இவர் திடீரென்று இந்த சிரியலில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதனால் தான் சீரியலில் இருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.