கண்ணான கண்ணே சீரியல் நித்யா தாஸுக்கு இவ்ளோ பெரிய மகளா ? பாக்க தங்கச்சி மாதிரி இருக்காரே.

0
1699
- Advertisement -

தற்போது சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் இளசுகள் மத்தியில் சட்டென்று பிரபலமடைந்துவிடுகின்றனர். தொலைக்காட்சிகளில் நடித்து வரும் எத்தனையோ இளம் நடிகைகளுக்கு சமூக வலைதளத்தில் இளசுகள் ஆர்மிக்கள் கூட இருக்கிறது. மற்ற சேனல்களை விட சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

தெலுங்கில் பௌர்ணமி என்ற டைட்டிலில் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் தெலுங்கில் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் தமிழில் ‘கண்ணான கண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கால் சன் டிவியில் சில சீரியல்களுக்கு திடீர் என்ட் கார்டு போடப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இதையும் பாருங்க : இதனால் தான் என் தந்தை இறந்தார், இந்த பழக்கம் இருந்தா தயவு செஞ்சி விட்ருங்க – நீலிமா கண்ணீர் வீடியோ.

- Advertisement -

பிரபல நடிகர் நடிகர் பப்லூ (கவுதம்) தொழிலதிபராக நடிக்கும் இத்தொடரில் அவரது மகள்களாக மீரா கதாபாத்திரத்தில் நிமிஷிகா ராதா கிருஷ்ணனும், அக்‌ஷிதா ரேவதி கேரக்டரிலும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்த இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தமிழில் இதயம், அன்பே வா, அழகு போன்ற தொடர்களில் நடித்து உள்ளார். நித்யா தாஸை பார்ப்பதற்க்கு தான் மிகவும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார். ஆனால் நிஜத்தில் அவருக்கு திருமணம் ஆகி பெரிய குழந்தைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவரது மகளின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement