குந்தவையிடம் (திரிஷா) லைவ் லொகேஷன் கேட்ட வந்தியத்தேவன் (கார்த்தி) – திரிஷாவின் செம பதில்.

0
780
ponniyin
- Advertisement -

பொன்னியின் செல்வர் டீசர் குறித்து நடிகர் கார்த்திக் போட்ட ட்விட்க்கு செம சுமாட்டாக திரிஷா போட்ட பதில் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க :இது தான் அப்பா’ – கருவில் இருந்த போதே இறந்த தன் தந்தையை மகனுக்கு காட்டிய மேக்னா. மனதை உருக்கும் வீடியோ.

பொன்னியின் செல்வன் படம்:

மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்:

தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படி மிகப் பெரிய ஜாம்பவான்கள் மொத்தம் இந்த படத்தில் பணியாற்றி இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், அனைவரும் காத்திருந்த பொன்னியின் செல்வன் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. அந்தந்த மொழியிலுள்ள ஜாம்பவான் நடிகர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் டீஸரை வெளியிட லைகா நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது.

கார்த்தி போட்ட டீவ்ட்:

இந்நிலையில் வந்தியதேவன் கார்த்தியும், குந்தவி திரிஷாவும் சோசியல் மீடியாவில் ரொமான்ஸ் செய்திருக்கும் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட நடிகர்களின் கதாபாத்திரம் போஸ்டர் வெளியாகி இருந்தது. தற்போது குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரிஷாவின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகின்றனர். இந்த போஸ்டரை குறித்து நடிகர் கார்த்தி அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார்.

திரிஷா போட்ட பதில் டீவ்ட்:

அதில், இளவரசி Please send me live location, உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும் என வந்தியதேவன் கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய் கிண்டலாக கார்த்தி போட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் லைவ் லொகேஷன் ஷேர் பண்ணுங்க கார்த்தி நாங்களும் திரிஷாவை பார்க்கணும் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். உடனே கார்த்தியின் பதிவை பார்த்த நடிகை திரிஷா கூறி இருப்பது, sorry அரண்மனையில் smart phones and smart people not allowed என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி கார்த்தியின் பதிவிற்கு திரிஷா போட்டிருக்கும் பதில் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement