கமல் தான் வனிதாவை வத்திகுச்சினு கலாய் த்தார்னு பர்த்தா இப்போ இவரும் கலாய்க்கிறாரே.!

0
4012
Vanitha
- Advertisement -

கடந்த சில தினங்களாக காதலும் கடலையுமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவின் என்ட்ரிக்கு பின்னர் தலைகீழாக மாறிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சிறப்பு விருந்தினராகச் சென்று உள்ள வனிதா தான் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் நாசுக்காக சண்டையை கிளப்பி விட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நடந்து வருகிறது.

-விளம்பரம்-

அதே போல வனிதா சென்ற நாளில் இருந்தே வனிதா தான் பிக் பாஸ் வீட்டையே கட்டுப்பாட்டில் வைத்து வருவது போல இருந்து வருகிறார். அதிலும் இவர் தான் தற்போது பிக் பாசிர்கே ஆர்டர் போட்டு வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது நான் அப்புறம் குறும் படம் போட்டு காண்பிக்க சொல்வேன் என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : காலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.! கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்.! 

- Advertisement -

அதே போல சிறையில் இருந்த அபிராமி, தன்னால் உடம்பிற்கு முடியவில்லை என்னை தயவு செய்து வெளியில் அனுப்புங்கள் என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கு பிக் பாஸ் எந்த பதிலையும் அளிக்கவில்லை. அப்போது வனிதா, அபிராமியிடம் நான் சொல்கிறேன் நீ வெளியே வா என்று உத்தரவு போட்டார். அதன் பின்னர் வனிதாவுடன் சென்ற லாஸ்லியா சிறையின் கதவை திறந்தார்.

இதனால் நேற்றய நிகழ்ச்சியில் வனிதாவை டார்கெட் செய்து கமல் பங்கமாக காலாய்த்தார். மேலும், இன்றைய ப்ரோமோ ஒன்றில் வனிதாவை வத்திக்குச்சி என்று கலாய்த்தார் கமல். தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் வனிதாவை கஸ்தூரியும் வத்திகுச்சி என்று கலாய்த்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement