சிவகார்த்திகேயன் இப்படி செய்வதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது – பிரபலத்தின் குற்றச்சாட்டு.

0
1392
Sk
- Advertisement -

சிவகார்த்திகேயனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கவிஞர் புலம்பி வருவதாக பிரபல பத்திரிக்கையாளர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சினிமா என்ற ஒன்று தொடங்கியிலிருந்து பாடல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி போன்ற கவிஞர்கள் தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் பல கவிஞர்கள் பாடல்களை எழுதி வருகிறார்கள். ஆனால் சமீப காலமாக பல கவிஞர்களுடைய திறமை நிருபிக்க முடியாமல் இருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கு காரணம், நடிகர்களே பாடல்களை எழுத தொடங்கி விட்டார்கள். அந்த வரிசையில் தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் தங்களுடைய திறமைகளை காட்டுவதற்காக திரைப்படங்களில் பாடல்களை எழுதி வருகிறார்கள். அதிலும், ஒரு படி தாண்டி சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில் மட்டும் எழுதாமல் பிறமொழி நடிகர்களின் படங்களிலும் பாடல்களை எழுதி வருகிறார். அந்த பாடல்களை எப்படியோ ப்ரொமோட் செய்து சூப்பர் ஹிட் ஆக்கி விடுகிறார்.

- Advertisement -

கவிஞர்கள் நிலைமை:

இதனால் பல கவிஞர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், பல கவிஞர்களுக்கு எழுதுவதை தவிர வேறு தொழில் தெரியாது. ஆனால், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் நடிப்பு, தயாரிப்பில் கோடி கணக்கில் சம்பாதித்தாலும் பாட்டு எழுதுவதையும் செய்து வருகிறார்கள். இதனால் பல கவிஞர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

சிவகார்த்திகேயன் போன்ற பலர் தாங்கள் எழுதும் பாடல்களின் வரிகளை எப்படியோ ஏனோ தானோ என்று எழுதி ஹிட்டாகி விடுகிறார்கள். ஆனால், இது மொழி வளமையை மழுங்கடித்து வருகிறது.அதோடு சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவதன் மூலம் வரும் வருமானத்தை மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் குடும்பத்திற்கு கொடுக்கிறார் என்று கூறியிருந்தார். இது கொஞ்சம் எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. இருந்தாலும், நடிகர்கள் பிற கவிஞர்களுக்கும் வாய்ப்புகளை தந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் அயலான். இந்த படங்களை தொடர்ந்து இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார்.

Advertisement