மணிரத்னம்-சுஹாசினி மகனா இது ? எப்படி வளந்துட்டாரு – லண்டனில் அவர் திறந்துள்ள அலுவலகம்.

0
1305
maniratnam
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக பல காலம் திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்தினம் இவர் தமிழ் சினிமாவில் ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா, விஜய், அஜித் என பல நடிகர்களை வைத்து பல வெற்றித்திரப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நாயகன், தளபதி, ராவணன் என்ற திரைப்பட வரிசையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படமும் இணைந்துள்ளது. பொன்னியின் செல்வன் பகுதி ஓன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இப்படி இயக்குனர் மணிரத்தினம் ஒருபுறம் கலக்கிக்கொண்டிருக்க மறுபுறம் அவரது மனைவியான சுஹாசினி மணிரத்தினம் நடிப்பில் கலக்கி விட்டு தற்போது இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர், தொகுப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குனர் சாருகாசனின் மகள் அவர். மேலும் இவரது அப்பாவின் சகோதரர் உலக நாயகன் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகை சுஹாசினி தமிழ் சினிமாவில் “நெஞ்சத்தை கிள்ளாதே” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். இவர் அதற்க்கு முன்பே உதிர் பூக்கள், காளி , ஜானி போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை சுஹாசினி 2003ஆம் ஆண்டு வெளியான “stumble” என்ற ஆங்கில படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்த வந்த சுஹாசினி 80ஸ் களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தார். தற்போது கூட மலையாளம், தமிழ், கன்னட படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல நிகச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இவர் கடந்த 1988ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் அவர்களை திருமணம் செய்து கொண்டார். மணிரத்தினம் – சுஹாசினி தம்பதிக்கு 30 வயதாகும் நந்தன் மணிரத்னம் என்ற மகனும் உள்ளார். மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுஹாசினி அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் போன்றவற்றை தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் லண்டனின் நடிகை சுஹாசினி மகன் நந்தன் மணிரத்னதின் புதிய அலுவலகம் திறப்பு விழா சமீபத்தில் நடை பெற்றது. இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த போன்ற பல பிரபலங்கள் கலந்த கொண்டிருந்தனர். இந்த விழாவின் போது தன்னுடைய மகனுடன் எடுத்த அழகிய புகைப்படங்களை சுஹாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்க்கு ரசிகர்களும் பிரபலங்கலும் லைக்குகளை போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement