எதுக்கு நசுக்கப்பட்டோம், பிசுக்கப்பட்டோம்னு சொல்லிட்டே இருக்கீங்க – மாரி செல்வராஜ் ஆவேச பேச்சு.

0
288
- Advertisement -

பிகே ரோஸி திரைப்பட விழாவில் சாதி படங்கள் குறித்து மாரி செல்வராஜ் ஆவேசமாக பேசி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தங்களுடைய நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழாவை வருடம் வருடம் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த விழா கடந்த எட்டாம் தேதி தொடங்கி நேற்றோடு நிறைவடைந்து இருக்கிறது. மேலும், நேற்று இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் வெளியிடப்பட்டது. இதில் மாமன்னன் படக்குழுவினர் கலந்து கொண்டு ரசிகர்களுடைய கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்கள். அப்போது மாமன்னன் படம் குறித்து மாரி செல்வராஜ், மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். என்னுடைய அப்பா ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் சாரில் உட்கார்ந்து இருந்தேன். ஆனால், அவர் உட்காரவில்லை.

- Advertisement -

விழாவில் மாரி செல்வராஜ்:

அன்று என்னுடைய அப்பா உட்பட யாருமே அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால், எனக்கு அவர் ஏன் உட்காரவில்லை? என்று எண்ணம் வந்தது. இது குறித்து நான் கேட்டபோது, நாங்கள் உட்கார மாட்டோம் என்று சொன்னார். இந்த மாதிரி நிறைய சம்பவங்களை என்னுடைய சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்றைக்கு பார்க்கும்போது அது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அது ஒரு கதையாக மாறுகிறது. பரியேறும் பெருமாள் படம் பண்ணிட்டு இருக்கும்போது கூட என்னுடைய அப்பா அப்படிதான் நின்று இருந்தார்.

சினிமா குறித்து சொன்னது:

என்னுடைய படைப்பு குறித்து பத்து வருடம் கழித்து கேள்வி கேட்கப்படலாம். எனக்கு இருக்கும் வலி அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்கி வைக்கிறேன். எனக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி சினிமா தான். என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. என்னுடைய கோபத்தை கலையில் காட்ட விரும்பவில்லை. என்னுடைய வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈசி. ஒரு வாழ்க்கையில் அறம் இருப்பதை நம்பி, அந்த அறத்தை பிடித்து காட்டுவது, அதன் மூலம் மனித தன்மையை கேள்விக்கு உட்படுத்துவது ஆகிய இதை தான் என்னால் பண்ண முடியும்.

-விளம்பரம்-

ஒடுக்கப்பட்டவர்கள் குறித்து சொன்னது:

அதை ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பதை பற்றி கவலை எனக்கு கிடையாது. நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டவருடைய வாழ்க்கையை தான் படம் எடுத்து காண்பிக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். ஆனால், தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையும் கதை தான். 10 பேரோட கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது.

கதை குறித்த சர்ச்சைக்கு விளக்கம்:

நசுங்கி பிசுங்கி காணாமல் போனவர்களுடைய கதையை தோண்டி எடுத்து அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டு, பிதுக்கப்பட்டனும் என்ற கேள்வி சொல்லிக் கொண்டே இருக்கீங்க என்று கேட்பார்கள்? வேறு வழி இல்லை, என்னுடைய கதையை சொல்லும்போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருவருடைய கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்த கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால் அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை தான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்வியை நான் கேட்டுக் கொண்டுதான் இருப்பேன் என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

Advertisement