அவருக்கு பாசம் காட்ட தெரியாது, ஆனா – இரங்கல் கூட்டத்தில் உருக்கமாக பேசிய மாரிமுத்துவின் மனைவி

0
1803
- Advertisement -

மீண்டும் அவரே எங்களை திரும்ப பார்க்க வந்தார் என்று கண்ணீர் மல்க மாரிமுத்து மனைவி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்கு சொந்தக்காரர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். பின் இவர் “கண்ணும் கண்ணும்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

- Advertisement -

மாரிமுத்து திரைப்பயணம்:

அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருந்தார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். இதனை எடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார்.

மாரிமுத்து திடீர் மரணம் :

இவருக்கு டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது நெஞ்சு வலி வந்து மருத்துவமனைக்கு சென்று இருந்தார். ஆனால், சிகிச்சை போதே இவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது இறப்பிற்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, இவருடைய குடும்பத்திற்கு மாரிமுத்து மறைவு பெரும் இழப்பு என்று சொல்லலாம். இந்த நிலையில் பிரபல youtube சேனல் மாரிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தது.

-விளம்பரம்-

மாரிமுத்து மனைவி அளித்த பேட்டி:

அதில் அவருடைய மனைவி கலந்து கொண்டிருந்தார். அப்போது மாரிமுத்துவின் மனைவி சொன்னது, வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்று திறனாளி ஒருவர் ஒரு அட்டையில் என்னுடைய கணவர் மாரிமுத்து பெயர் எழுதி தன்னுடைய கிராமத்து ஊரின் பெயரை மட்டும் எழுதி எங்களுடைய வீட்டில் வந்து என்னை சந்தித்து ஆறுதல் கூற வந்திருந்தார். அவரை பார்த்ததுமே எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமும் பேரதிர்ச்சி அடைந்து விட்டது. இப்படிப்பட்ட மனிதரை எல்லாம் என்னுடைய கணவர் ரசிகராக வைத்திருக்கிறாரா! என்று நினைத்து என்னை கண்கலங்க வைத்துவிட்டது.

மாரிமுத்து குறித்து சொன்னது:

என்னுடைய கணவரை நான் மீண்டும் அவருடைய ரூபத்தில் எங்களை பார்க்க வந்ததாக நான் உணர்ந்தேன். பின் அவருக்கு உணவு வழங்கி, திரும்பி செல்வதற்கு காசு கொடுத்து அவரை பேருந்தில் ஏற்றி விட்டோம். என்னுடைய கணவருக்கு பாசம் காட்டத் தெரியாதே தவிர மற்றபடி எப்பொழுதும் குடும்பம் குடும்பம் என்று தான் நினைத்துக் கொண்டே இருப்பார். அவருடைய மறைவு எங்களை ரொம்பவே வாட்டிக் கொண்டிருக்கின்றது என்று கண்ணீருடன் கூறியிருந்தார்.

Advertisement