மைனா படத்துல அமலா பாலுக்கு அம்மாவா நடிக்க சொல்ல எனக்கு 22 வயசு தான் – ஷாக் கொடுத்த மாயாண்டி குடும்பத்தார் பட நடிகை.

0
1263
maayandi
- Advertisement -

நாம் சினிமாவில் எவ்வளவோ கதாபாத்திரங்களில் நடித்து சில பேர் பிரபலமாய் இருப்பார்கள்.ஆனால் சில பேர் சில படங்களிலே குறுகிய காட்சிகளில் மட்டுமே நடித்திருப்பார்கள் ஆனால் என்றுமே அந்த காட்சிகளை நடித்தவர்கள் நம் மனதில் அப்படியே பதிந்து இருப்பாரகள். அது மாதிரியாக சில பாடங்களில் நடித்து நம் மனதில் என்றும் குடியிருப்பவர் தான் பூவிதா. இவர் யார் என்று சொல்ல வேண்டும் என்றால் மைனா படத்தில் அமலா பாலுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்போது இவர் தமிழ் சினிமாவில் 35 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் அதில் பல படங்களில் ஞாபகம் வைத்துக் கொள்ளும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சுப்பிரமணிய புரம் பட வாய்ப்பு :

ஒரு நாள் சசிகுமார் அவரின் சுப்பிரமணியம் புரம் படம் சூட்டிங். அவரின் அண்ணி கதாபாத்திரத்திற்கு நடிக்க வந்தவர் பயந்து போய் சரியாக நடிக்கவில்லை என்றும் அந்த வீட்டின் சூட்டிங் மூன்று நாள் தான் எடுத்திருந்ததால் உடனடியாக இந்த கதாபாத்திரத்திற்கு ஆள் தேவைப்பட்டதால் என்னுடன் பணியாற்றும் ஒருவர் இந்த மாதிரி சீரியலுக்கு ஆள் தேவைப்படுது என்றும் என்னை போய் நடிக்க சொல்லி அனுப்பி வைத்தார். நான் முதலில் பயந்தேன் அவர் தைரியம் சொல்லி பரவாயில்லை நடி என்று அனுப்பி வைத்தார். அப்படியாகத்தான் அந்த படத்திற்கு வந்தேன் எனக்கு நடிக்க வந்த பிறகு தான் தெரியும் இது படம் என்று அங்கு சென்ற பிறகு டயலாக் கொடுத்தார்கள் மக்களின் முன்னிலையில் கலை நிகழ்ச்சி பண்ணியதால் அந்த தைரியத்தில் நடித்து விட்டேன் அவர்களும் ஓகே என்று சொன்னார்கள்.

- Advertisement -

மாயாண்டி குடும்பத்தார் படம் :

பின்பு என் நடிப்பை பார்த்துவிட்டு மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பரமாவிற்கு அண்ணி கதாபாத்திரத்திற்கு நான் தான் வேண்டும் என்று எங்கள் வீட்டுக்கே வந்து பேசிவிட்டு என்ன நடிக்க அழைத்துச் சென்றார்கள். இப்படியாக தான் சுப்பிரமணியம் புரம் படம் மூலம் மாயாண்டி குடும்பத்தார் பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாயாண்டி குடும்பத்தார் நான் பரமனை திட்டுவது போல் ஒரு காட்சி வரும் அந்த காட்சியில் எல்லாம் சண்டையில் நிஜமாகவே அடித்து தான் பேச வைத்தார்கள் அவர்களுக்கு அந்த எமோஷன் தேவைப்பட்டதால் என் கணவரிடம் கேட்டுவிட்டு தான் என்னை அடித்தார்கள். அவர்கள் அடித்தது என்னவோ படத்திற்க்காக. ஆனால் அவர்களை நிஜமாகவே திட்டி விட்டேன். ஆம், அந்த காட்சியில் வரும் உன் கையில் கட்டை முளைக்க என்ற வசனமும் நான் நிஜமாகவே அவரை திட்டியதுதான்.

அமலா பாலுக்கு அம்மாவா நடித்தேன் :

அதன் பிறகு தான் மைனா படத்திற்கு எனக்கு வாய்ப்பு வந்தது நீங்கள் தான் அமலா பாலுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். முதலில் டக்கென்று சரி என சொல்லிவிட்டேன் பிறகுதான அமலா பாலுக்கு அம்மாவாக நடிக்கும் போது எனக்கு வயது 22 தான் நானே ஒரு வயது பெண் இன்னொரு வயது பெண்ணுக்கு அம்மாவாக கடிக்க வேண்டுமோ என்று யோசித்தேன் பிறகு சரி என்று அதையும் நடிக்க முடிவெடுத்து விட்டேன். இப்படியா தான் இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தேன் இந்த படத்தில் ஒரு காட்சியில் வரும் கதாநாயகன் என்னை ஒரு இடத்தில் வைத்து உதைத்து தள்ளி விடுவார். ஆனால் அந்த காட்சி உண்மையில் அப்படி இருக்காது அவர் அக்கா உங்களை என்னால் உதைக்க முடியாது சிக்னல் செய்க்கிறேன் நீங்களே விழுந்து விடுங்கள் என்று கூறினார்.

-விளம்பரம்-

மைனா படத்தில எனக்கு அடிபட்டது :

அதன் பிறகு பயந்து பயந்து போய் விழுந்து. எப்படியோ அந்த காட்சியை நிறைவு செய்து விட்டேன் அதன் பிறகு அருவாளை எடுத்து அந்த படத்தில் சுற்றுவது போல் ஒரு காட்சி வரும் அந்த காட்சியில் நான் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு அடிபட்டு விட்டது காலில் அதையும் தாண்டி சீன் நல்லாகவே சென்று கொண்டிருக்கிறது அந்த காரணத்தினால் அதைப் பொறுத்துக் கொண்டு நடித்தேன். அதன்பிறகு வாகை சூட வா படத்தில் செங்கல் சூழையில் வேலை பார்க்கும் பென்னாக நடித்தேன் அந்த படத்தில் ஒரு காட்சியில் சண்டை காட்சி வரூம் என்னை தள்ளிவிடும் காட்சிகள் வரும் அது எல்லாம் நீ ரியலாக நானாக நடிக்கிறேன். என்று சொல்லி நடித்தேன். வாகை சூட வா படம் நேஷனல் விருதுக்காக எடுத்த படம்.

சொந்தமாக கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார் :

அதனால் டூப் போடமல் நானே அந்த காட்சியில் நடித்தேன். அந்த சண்டை காடிசியில் அவர்கள் தள்ளிவிடும் போதெல்லாம் கீழ் விழுவேன். அப்பொது என் வாயில் மண்ணெல்லாம் சென்று விடும் கஷ்டப்பட்டு நடித்தேன். இதற்கெல்லாம் பலனாக எனது சொந்தக்காரர்கள் எல்லாம் அனைவரும் போன் செய்து பேசுவார்கள் உங்கள் படதில் பார்த்தேன் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் மைனா படத்தை பார்த்ததாக என்னிடம் போன் பண்ணி பேசினார்கள். தற்போது சொந்தமாக கலை நிகழ்ச்சிகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறேன் பட சூட்டிங் வந்தால் அந்த நாளில் சூட்டிங் சென்று விடுவேன். என அவர் நடித்த திரைப்படங்களின் வாய்ப்புகள் மற்றும் அவருடைய சுவாரசியமான அனுபவங்களை நம்மிடையே மனம் திறந்து பேசினார் பூவிதா.

Advertisement