அவர் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக துபாய் சென்று விட்டார். அதனால் நயன் ஒரு மணி நேரம் அழுதார். நடிகர் சொன்ன சீக்ரெட்.

0
94530
nayan
- Advertisement -

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் நயன்தாரா மற்றும் தனுஷ். சினிமா உலகில் இவர்கள் இருவருமே மிக பிரபலமான நடிகர்கள். அது மட்டுமில்லாமல் சினிமா உலகில் சில நடிகர்களுக்கு மட்டும் தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில் இவர்கள் இருவருக்குமே மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்று சொல்லலாம். சமீபத்தில் தான் தனுஷ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த “அசுரன்” படம் மிகப் பெரிய அளவு வெற்றி அடைந்தது. இதற்காக அவர் தேசிய விருது கூட வாங்கினார். தற்போது “என்னை நோக்கி பாயும் தோட்டா” என்ற படத்தில் தனுஷ் அவர்கள் நடித்திருந்தார். இந்த படமும் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

அதே போல் தென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. இது பல பேருக்கு தெரியாது என்று கூட சொல்லலாம். உண்மையிலேயே நடிகை நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள். இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் தமிழில் 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதுமட்டுமில்லாமல் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு முதல் புத்தாண்டு பரிசை மேடையில் கொடுத்த நபர். வைரலாகும் வீடியோ.

சமீபத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படத்தில் நடித்திருந்தார். தற்போது கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கிற்கு வெளிவரப்போகும் “தர்பார்” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா அவர்கள் தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலும், நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

-விளம்பரம்-
விடீயோவில் 24 நிமிடத்தில் பார்க்கவும்

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு “யாரடி நீ மோகினி” படத்தின் சார்பாக நடிகர் தனுசும், நயன்தாராவையும் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் அவர்கள் பேட்டி எடுத்தார். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். அப்போது உங்கள் வாழ்க்கையில் மிக சந்தோஷமான விஷயம் என்னவென்று ஈரோடு மகேஷ் கேட்டு நயன்தாராவிடம் உள்ளார். அதற்கு நயன்தாராவுக்கு பதில் நான் சொல்லட்டுமா என்று தனுஷ் கூறினார்.

அதில் அவர் கூறியது, நயன்தாராவுடைய அண்ணன் மகள் பிறந்தது தான் அவங்களுடைய வாழ்க்கையில் மிக சந்தோஷமான விஷயம். ஏன்னா, அவங்க அண்ணன் மகள் ஏஞ்சலினா கிறிஸ்மஸ் பண்டிகைக்காக துபாய் சென்று விட்டார். அந்த பிரிவை தாங்க முடியாமல் நயன்தாரா அவர்கள் ஒரு மணி நேரம் செட்டிலேயே அழுது கொண்டிருந்தார். எல்லாருமே நயன்தாராவின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்பவும் அவரால் அழுகையை நிறுத்திவிட்டு வர முடியவில்லை என்று கூறினார். இது குறித்து நயன் கூறியது, அவள் பிறந்த அன்னைக்கு தான் என்னுடைய முதல் நாள் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது. அவள் எனக்கு ரொம்ப லக்கி கேள். அவள் பிறந்த பிறகு தான் எனக்கு பட வாய்ப்புகள் வந்தது என்று சொல்லலாம் என்று கூறினார். தற்போது இந்த வீடியோ பல வருடங்கள் கழித்து இணையங்களில் பரவி வருகிறது.

Advertisement