தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் பெரும்பன்மையாக கன்னடம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார். மேலும், 2016ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான” யு டர்ன்” படத்தில் தான் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். பின் 2017ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து பிளாக் பஸ்டர் படமான ” விக்ரம் வேதா” திரைப்படம் தான் இவரை சினிமா துறையில் தூக்கிவிட்டது என்று சொல்லலாம். அது மட்டும் இல்லைங்க பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்பவர் உதம்பூர் மாவட்டம், ஜம்மு-காஷ்மீரில் பிறந்தவர்.
இவருடைய தந்தை இந்திய தரைப்படையின் குமாவு படையின் அதிகாரியாக பணிபுரிகிறார். இவருடைய தாயார் பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார். அதோடு நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள் இந்தியாவிலுள்ள பெரும்பாலான நகரங்களில் வாழ்ந்தவர். மேலும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,கர்நாடக, தெலுங்கானா என பல மாநிலங்களில் வாழ்ந்துள்ளார். இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னுடைய சட்டப்படிப்பை பெங்களூரில் பயின்றார். பின்பு வழக்கறினராகவும்,பிரான்ஸ் நிறுவனத்தின் சட்ட ஆலோகசராகவும் பணி புரிந்தார். இப்படி இருக்கும் நேரத்தில் கூட அப்பப்ப நாடகத்திரைப்படம்,விளம்பரம் போன்ற பல வேலைகள் செய்து வந்தார். மேலும்,இவர் முதன் முதலில் மலையாள மொழியில் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் தமிழில் கார்த்திகின் ‘ காற்று வெளியிடை’ படத்தில் கவுரவ தோற்றத்தில் அறிமுகமானார். பின் ஆர். கண்ணன் இயக்கத்தில் ‘இவன் தந்திரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு பின் இலங்கையில் முதல் பேட்டியில் பங்கேற்ற லாஸ்லியா.. என்ன கூறியுள்ளார் பாருங்க..
மேலும்,புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப்படம் மாபெரும் வெற்றியாக அமைந்த படம். இந்த படம் வியாபார ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் வெற்றி கொடுத்தது. தற்போது அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திலும் நடித்திருந்தார். இவர் அதிகமாக சினிமா துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்களுடன் தான் நடித்து வருகிறார் என்ற தகவல் இணையங்களில் பரவிவருகிறது. அதோடு தெலுங்கில் இவர் நடித்த ‘ஜெர்சி’ படம் சூப்பர் ஹிட்.தற்போது நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஐந்து வருடங்களுக்கு முன்னால் குண்டான தோற்றத்தில் இருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுஉள்ளார். இது பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்று சொல்வது போல் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என்று பல கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள் ரசிகர்கள். இதனை தொடர்ந்து நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியது, நான் ஐந்து வருடத்தில் 18 கிலோ எடையை குறைத்து இருக்கிறேன். அதற்காக நான் பல முயற்சிகளை செய்துள்ளேன் என்று கூறினார்.
அது நான் ஒரு வருஷமாக என்னுடைய சட்டப் படிப்புக்காக தான் கவனம் செலுத்தி இருந்தேன். பின்னர் என்னுடைய வேலை என்னுடைய வாழ்க்கை மாறியது. நான் முதல்ல 5 நிமிஷத்துக்கு தான் ரன்னிங் போக தொடங்கினேன். பின்னர் 15 நிமிஷம் ஓடத் தொடங்கினேன். அதுக்கப்புறம் 40 நிமிஷம் ஓடினேன். பின் ஐந்து வருடங்களில் சுமார் 18 கிலோ எடை குறைந்து இருக்கிறேன். அந்த போட்டோவை பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமா! இருக்கு என கூறியிருந்தார். நல்ல உடற்பயிற்சி, பயிற்சிகளை செய்து வந்தால் எந்த ஒரு மருந்துகளும் இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம் அதோட உணவுப் பழக்கங்கள் என கவனம் செலுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறினார்.