இந்து கடவுளை பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி அவதூறாக பேசிய வழக்கு-நீதிபதி போட்ட உத்தரவு

0
1561
- Advertisement -

இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசிய பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீதான வழக்கு குறித்து நீதிபதி அளித்திருக்கும் உத்தரவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் அட்டகத்தி உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார்.
இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நல்ல இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

- Advertisement -

பா ரஞ்சித் திரைப்பயணம்:

சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தற்போது விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் கதையாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

பா ரஞ்சித் உதவி இயக்குனர் மீது புகார்:

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து இவர் சில படங்களை இயக்குவதில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் வழக்கு பதிவு செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனராக இருப்பவர் விடுதலை சிகப்பி.

-விளம்பரம்-

போலீசார் வழக்கு பதிவு :

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடந்த அபிராமபுரம் முத்தமிழ் பேரவை நிகழ்ச்சியில் பா ரஞ்சித்தின் உதவி பேரவை விடுதலை சிகப்பி கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் பேசும்போது இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருக்கிறார். இதனால் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி அளித்த உத்தரவு:

அந்த மனுவில், மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலையை விளக்கும் வகையிலேயே நான் கவிதையை வாசித்திருந்தேன். இதில் யாருடைய மத உணர்வுகளையும் எந்த விதத்திலும் நான் புண்படுத்தவில்லை. இதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து இந்த மனு நீதிபதி என் ஆனந்த் வெங்கடேசன் பார்வைக்கு இன்று வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, விடுதலை சிகப்பு மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisement