சாகும் தருவாயிலும் தனது மாற்றுத்திறனாளி மகன் குறித்து கவலைபட்ட பரவை முனியம்மா. வீடியோ இதோ.

0
30963
paravai
- Advertisement -

பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று (மார்ச் 29) உடல் நல குறைவால் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புற பாடகியாகவும் திகழ்ந்து விளங்கியவர் பறவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்று அழைக்கிறார்கள். இவர் தமிழ் சினிமா உலகிற்கு விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தூள்” எனும் படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.பின்னர் காதல் சடுகுடு, பூ, தேவதையை கண்டேன் என 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

சினிமா துறையில் பல பிரபலங்கள் இவரை அம்மாவாக, பாட்டியாக கொண்டாடி மகிழ்ந்தனர். இவர் நாட்டுப்புறக்கலை மட்டுமல்லாமல் நகைச்சுவை, நடிப்பு என பல துறைகளில் சிறந்து விளங்கியவர். இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றும் தன்னுடைய நாட்டுப்புற கலையை மேம்படுத்தி உள்ளார்.

இதையும் பாருங்க : கொரோனா வருகிறது என்று 7 வருடங்களுக்கு முன்பே கூறியுள்ள நபர். அதிர்ச்சியில் நெட்டிசன்கள்.

- Advertisement -

பரவை முனியம்மா சினிமா உலகம் மட்டும் தான் நமக்கு தெரியும்.ஆனால், இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களும், வேதனைகளும் நிறைந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல் நிலை மிகவும் மோசமானதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடிகர் அபி சரவணன் அது மட்டுமல்லாமல் நடிகர் அபி சரவணன் அவரை மருத்துவமனையில் சேர்த்து, உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்துக்கொண்டார்.

தொடர் சிகிச்சை மூலம் பறவை முனியம்மா உடல் நலம் தேறி வருவதாகவும் அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் பறவை முனியம்மா குறித்து பதிவிட்டிருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் ‘மாயநதி’ படத்தை அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் பார்த்தார். நீண்ட நாட்கள் கழித்து தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் மனதுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் பரவை முனியம்மா உடல் நிலை சரியில்லாததால் காலமாகியுள்ளார்.

-விளம்பரம்-

புகழின் உச்சியில் இருந்த பரவை முனியம்மா வயது முதிர்ந்த நிலையில் நோய் காரணமாக வறுமையில் வாடி இருந்தார் .பரவை முனியம்மா ஒரு ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர். இவருடைய வறுமையை கண்டு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் ஆறு லட்சம் ரூபாய்யை நிதி உதவியும், குடும்பச் செலவுக்காக மாதம், மாதம் ஆறாயிரம் ரூபாயும் கொடுத்து இருந்தார். அது மட்டுமில்லாமல் மாதாந்திர மருத்துவமனை செலவிற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்.பரவை முனியம்மாக்காக இப்படி பல உதவிகளைச் செய்துள்ளார்.

இதையும் பாருங்க : அட, தனுஷா இது ? இதுவரை வெளிவராத புகைப்படத்தை வெளியிட்ட ஷெரின்.

இவர்களுக்கு மாற்று திறனாளி மகனும் உள்ளார்.மேலும், இது குறித்து பரவை முனியம்மா கடந்த ஆண்டு பேட்டி ஒன்றை அளித்திருந்தார் . அதில் அவர் கூறியது, நான் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருக்கிறேன். அதனால் எனக்கு வழங்கி வரும் நிதி உதவியை என்னுடைய இறப்புக்குப் பிறகு என்னுடைய மாற்றுதிறனாளி மகனுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று கூறினார். தற்போது பரவை முனியம்மா இறந்துவிட்டதால் இவருடைய கோரிக்கையை அரசாங்கம் ஏற்று செயல்படுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement