எப்படி இருக்கிறது ‘பரோல்’ – கூடவே FDFS பார்த்த ரசிகர்களின் விமர்சனம்.

0
807
- Advertisement -

இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பரோல். இந்த படத்தில் லிங்கா, ஆர் எஸ் கார்த்திக், கல்பிகா, மோனிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை Tripr Entertainment நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ராஜ்குமார் அமல் இசை அமைத்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் பரோல் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிங்கா சிறு வயதிலேயே தவறு செய்து விட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார். அங்கு சிறையில் கரிகாலனிடம் சிலர் தகாத முறைகளில் நடந்து கொள்கிறார். இதனால் கரிகாலன் கோபம் அடைகிறார். பின் அவர்களை கொடூரமான முறையில் கரிகாலன் கொலை செய்கிறார். சிறு வயதிலேயே சிறைக்கு சென்ற கரிகாலன் ஆறு ஆண்டுகள் கழித்து தான் வெளியே வருகிறார்.

- Advertisement -

கரிகாலனை வெளியில் எடுக்க அவருடைய தாய் தான் கஷ்டப்படுகிறார். கரிகாலனின் தம்பி கோவலன் கதாபாத்திரத்தில் ஆர் எஸ் கார்த்திக் நடித்திருக்கிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே கரிகாலன் மீது மட்டும் தான் தன்னுடைய அன்பு செலுத்துகிறார் என்று அண்ணன் மீது வெறுப்பு செலுத்துகிறார். மேலும், கரிகாலன் தன் தாய் எவ்வளவு சொல்லியும் கொலை செய்வதை நிறுத்துவதே இல்லை. தவறான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறார்.

அப்படி அவர் தொடர்ந்து கொலை செய்து வரும் நிலையில் கரிகாலன் ஒருமுறை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை உடன் சிறை செல்கிறார். எப்படியாவது தன் மகனை சிறையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்று தாய் போராடுகிறார். பின் இந்த போராட்டத்தில் அவர் திடீரென இறந்து போகிறார். தனது அண்ணன் மீது இருக்கும் வெறுப்பினால் தன்னுடைய தாய்க்கு இறுதி சடங்கை கூட அண்ணனை செய்ய விடக்கூடாது தானே செய்துவிடலாம் என்று கோவலன் நினைக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், கரிகாலனின் நண்பர்கள் இதில் தலையிட்டு கரிகாலனை வெளிய எடுக்கும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். இந்த முயற்சியில் கரிகாலனுக்கு பரோல் கிடைத்ததா? அதற்குள் சிறையில் இருந்த கரிகாலன் என்ன செய்தார்? அண்ணன் மீது இருக்கும் கோபத்தினால் கோவலன் எடுத்த முடிவு என்ன? தாய் உடைய இறுதி சடங்கை செய்தது யார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் கார்த்திக் – லிங்கா இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

தாய் கதாபாத்திரத்தில் நடிகை ஜானகி சுரேஷ் படத்தை தாங்கி நிற்கிறார் என்று சொல்லலாம். இவர்களை தொடர்ந்து படத்தின் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் கையாண்ட கதைக்களம் புதுமை என்றாலும் கதையைக் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை லாகில்லாமல் நகர்கிறது. இதற்காகவே இயக்குனருக்கு தனி பாராட்டு செலுத்தலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக பரோல் இருக்கிறது.

நிறைகள் :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இயக்கம் கதைக்களம் சிறப்பு.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது.

குறைகள் :

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.

திரைக்கதையை புரியும் படி கொண்டு சென்றிருக்கலாம்.

மொத்தத்தில் பரோல் – பாசத்தின் போராட்டம்

Advertisement