‘அத முன்னாடி இல்ல கேக்கணும்’ ஏ ஆர் அமர்ந்து கொண்டு இருக்கும் போதே மைக்கை தூக்கி எரிந்த பார்த்திபன் – வைரலாகும் வீடியோ.

0
502
parthiban
- Advertisement -

இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் வெளியீட்டின் போது மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கை தூக்கி எறிந்து விட்டு பார்த்திபன் சென்ற வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதுவரை தமிழ் சினிமா உலகில் கொண்டு வராத புது முயற்சியை பார்த்திபன் செய்து இருந்தார். மேலும், இந்த படத்தை பார்த்திபன் அவர்களே தயாரித்தும், இயக்கியும், நடித்தும் இருந்தார். இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருந்தார்.

- Advertisement -

ஒத்த செருப்பு சைஸ் 7 படம்:

இதற்காக ஸ்பெஷல் ஜூரி பிரிவில் தேசிய விருதும், சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதோடு ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் அபிஷேக்பச்சனை வைத்து பார்த்திபன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இரவின் நிழல் படம் பற்றிய தகவல்:

இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் கடந்த மார்ச் வெளியாகியி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

விழாவில் கோபத்தில் பார்த்திபன் செய்த வேலை:

அப்போது பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முதல் பாடல் வெளியீட்டின் போது ஏ ஆர் ரகுமான், பார்த்திபன் இருவரும் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்திபன் பேசிக்கொண்டிருக்கும்போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. உடனே பார்த்திபன் கோபப்பட்டு மேடை மேல் இருந்து மைக்கை தூக்கி கீழே எறிந்தார். பிறகு விழாவில் பேசும்போது பார்த்திபன் கூறியிருப்பது. பொதுவாகவே நான் மேடையில் பேசும்போது ரொம்ப பதட்டம் ஆகிவிடுவேன்.

பார்த்திபன் மைக் தூக்கி எறிந்த காரணம்:

ஏனென்றால், எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது மட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் ஒரு சில்டு கொடுத்தார். அதை தூக்கும் போது எனக்கு கை கொஞ்சம் சுளுக்கு பிடித்துவிட்டது. என்னால் வெளியில் கத்த முடியவில்லை. அந்த சமயம் பார்த்து மைக் வேலை செய்யவில்லை. அந்த கோபத்தில் நான் மைக்கை தூக்கி போட்டு விட்டேன். நான் செய்தது அநாகரிகமான செயல் தான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement