பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் அமீரா? ஞானவேலா? – சென்சார் சான்றிதழால் புது குழப்பம்

0
434
- Advertisement -

பருத்திவீரன் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் குறித்த புது சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் அமீர்-ஞானவேல் ராஜா சர்ச்சை தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழில் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த படம் பருத்திவீரன். இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு, சரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருது, மாநில விருது என பல விருதுகள் கிடைத்திருந்தது. இப்படி இருக்கும் நிலையில் 16 ஆண்டுகளாக புகைந்து கொண்டிருந்த அமீர்- ஞானவேல் ராஜா உடைய பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் அமீர், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை.

- Advertisement -

பருத்திவீரன் சர்ச்சை:

அதனால் நானும் போகவில்லை. பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். சிவக்குமார், சூர்யா, கார்த்திக் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார். அவரால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம் என்று கூறி இருந்தார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி:

இதன் பின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் என்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி இருக்கிறார். அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கி கொடுப்பதாக சொன்னார். சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காபி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு வருடங்களில் 4 கோடி வரை செலவு செய்தார். என்னை மட்டும் இல்லாமல் இன்னும் சில தயாரிப்பாளர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அமீர் மோசடி செய்து இருக்கிறார். அமீர் ஒரு திருடன் என்று விமர்சித்து கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

பிரபலங்கள் விவகாரம்:

இப்படி கோலிவுட் வட்டாரத்திலேயே அமீரின் விவகாரம் தான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக், சூர்யா இருவருமே அமைதி காப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் அமீரிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதோடு பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பருத்திவீரன் படத்தை பாதியிலேயே ஞானவேல் ராஜா தயாரிக்க கைவிட்ட போதிலும் தன்னுடைய நண்பர்களின் உதவி மூலம் கடன் வாங்கி அமீர் இந்த படத்தை வெளியிட்டு இருந்தார் என்று கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் சர்ச்சை:

படத்தின் வெற்றிக்கான பெருமை அனைத்தையும் ஞானவேல் ராஜாவை எடுத்துக் கொண்டதாக பலரும் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் பருத்திவீரன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், படத்தின் தயாரிப்பாளர் என்ற இடத்தில் இயக்குனர் அமீர் பெயரும், தயாரிப்பு நிறுவனம் டீ ஒர்க் ப்ரோடக்‌ஷன் என்ற பெயரும் வந்திருக்கிறது. இதனால் இந்த படத்தினுடைய உண்மையான தயாரிப்பாளர் யார்? என்ற குழப்பம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது.

Advertisement