ஒரு டீச்சர் இப்டி பண்ணிருக்காங்க, அத விட்டுட்டு “இன்ஸ்டிடியூட் அட்டாக் பண்றாங்க” னு பேசுறீங்க, வெக்கமா இல்ல – மதுவந்தியை கிழித்த பெண். அதற்கு அவரின் பதிலை பாருங்க.

0
118245
madhu
- Advertisement -

சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்.பி.பி பள்ளியில் பணிபுரிந்து வரும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் ராஜகோபாலன் போலிசாரால் கைது செய்ப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், விசாரணையில் அவர் மாணவிகளிடம் கடந்த 5 ஆண்டுகளாக இப்படி நடந்துவந்துள்ளதாக வாக்குமூலமும் அளித்துள்ளார். இந்த பள்ளியானது, திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையார்,  ஒய்.ஜி.பார்த்தசாரதி (யேச்சா குஞ்சா பார்த்தசாரதியால் ( யேச்சகுஞ்சா பார்த்தசாரதி ; 30 செப்டம்பர் 1917 – 1990) தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு,  அவரது மனைவியும்,  பிரபல கல்வியாளருமான   ராஜலட்சுமி பார்த்தசாரதி நடத்தி வந்தார். பின்னர் அவரும் காலமானதை தொடர்ந்து தற்போது இதனை அவரது குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

இதையும் பாருங்க : நடிப்பே வேண்டாம், இப்போ கூட எனக்கு இப்படி ஒரு வேலை கிடைச்சா நல்லா இருக்கும் – வாணி போஜன் உருக்கமான பேட்டி.

- Advertisement -

சமூக ஊடகங்களில் ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது மகள் மதுவந்தியும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மதுவந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ராஜகோபால் பள்ளியில் பணிபுரியும் ஓர் ஆசிரியர். அவர் செய்தது மன்னிக்க முடியாத தவறு அதற்கு அவருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பது எந்த மாற்றமும் இல்லை. ஆனால்,  ஒரு தனிப்பட்ட நபர் செய்த விஷயம் என்று தான் புகார் வந்துள்ளது.

ஆனால், ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் பள்ளியையே தவறாக எழுதுகிறார்கள்.என் பாட்டி திருமதி ஒய்ஜிபி ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைத்து வளர்த்துவிட்ட மிகப்பெரிய கல்விக்கூடம் இது. அவங்க பேருக்கோ, இல்லை இந்த பள்ளியின் மரபுக்கோ எந்த கலங்கமும் வரக்கூடாது. அப்படி வந்தால் நாங்கள் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டோம்.அது என்னுடைய பள்ளிதான், ஏனென்றால் நான் அங்கு தான் படித்தேன். ஆனால், அந்த பள்ளியை நானோ என் அப்பாவோ நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மதுவந்தியின் இந்த பேச்சு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் ட்விட்டரில் பெண் ஒருவர் குரூப் காலில், மதுவந்தியை ‘உங்களை மேடம்னு சொல்லவே அசிங்கமா இருக்கு . நீங்கள் டிரஸ்டியாக இருக்கும் ஒரு பள்ளியில் இப்படி நடந்திருக்கிறது ஆனால் நீங்கள் இங்கே வந்து பேசுவதற்கு அசிங்கமாக இல்லை ஒரு டீச்சர் இப்படி செய்திருக்கிறார் அதையெல்லாம் விட்டுவிட்டு இன்ஸ்டிடியூட் அட்டாக் பண்றாங்க” னு பேசுறீங்க உங்களுக்கு வெக்கமா இல்ல என்று கூறியுள்ளார். இதற்க்கு பதில் அளித்த மதுவந்தி, குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் அந்த நபர் கண்டிப் பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை நாம் தெளிவாக சொல்லி விட்டேன் நான் இந்த பள்ளி மாணவியாக இருந்ததை எண்ணி அசிங்க பட வில்லை அதேபோல என்னை இந்துவாகவும் பிராமணராகவும் இருப்பதை எண்ணி நான் சிங்க படவில்லை,.

Advertisement