இந்தி நடிகை யாமி கவுதம், வட இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்த இந்தி நடிகை, தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான “கௌரவம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இவரை தமிழ் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பது சற்று கடினம் தான். சமீபத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு டிவி விளம்பரத்தில் நடித்த பொது தனக்கு நடந்த பாலியல் சீண்டலை குறித்து பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகையான இவர் , என்.டி டிவி, கலர்ஸ் போன்ற இந்தி சேனல்களில் ஒளிப்பிப்பார்ப்பான பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் 29 வயதாகும் இந்த இளம் நடிகை கன்னடத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான “உல்லாச உட்சஹா ” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பின்னர் ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்த இவர், பின்னர் பாலிவுட்டிற்கு விஜயம் செய்தார். இவர் முன்னாள் ஃபேர் அன் லவ்லி என்ற விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளமப்ரதில் நடித்தபோது போது ஒரு இளைஞரை அடித்துளளார்.
அதற்கு காரணம் தான் அந்த விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவருடைய கையை பிடித்து இழுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த நடிகை யாமி கவுதம் பொது இடத்திலேயே அந்த இளைஞரை பளார் என்று அறைந்துள்ளாராம்.