இதுகுறித்து கமல் மீது டிடிவி தினகரன் வழக்கு தொடர போவதாக கூறினார். இந்நிலையில் திரைப்பட வர்த்தக கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், கமலை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அளவுக்கு மீறி அதிகமாகவும் மிக அநாகரிகமாகவும் பேசுகிறார். அவர் பேசிய பேச்சு ஆர்.கே நகர் மக்களை மிகவும் அவமானப்படுத்தியுள்ளது. இது அநாகரிகமான செயல். என கமலை தாக்கி பேசினார் பவர்ஸ்டார்.
மேலும், ரஜினியின் அரசியல் பயணம் குறித்து பேசிய அவர், அதனை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் கூறினார்.




