இரண்டாம் திருமணம் குறித்து வெளியான செய்தி – பதிவை நீக்கிய நடிகை பிரகதி

0
347
- Advertisement -

தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சைக்கு நடிகை பிரகதி கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக திகழ்ந்தவர் பிரகதி. இவர் தமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் பிரகதி துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் இவர் அதிகம் தெலுங்கு மொழிப் படங்களில் தான் நடித்து உள்ளார். மேலும், இவர் தெலுங்கு- தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஏராளமான படங்களில் அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். குறிப்பாக, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து இருந்தார்.

- Advertisement -

பிரகதி திரைப்பயணம்:

இத்தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. பிறகு திடீரென்று பாதியிலேயே இந்த சீரியலை முடித்து விட்டார்கள். அதற்குப் பிறகு பிரகதி தமிழில் எந்த சீரியலும் நடிக்கவில்லை. இவர் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு கடினமான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார்.

பிரகதி குடும்பம்:

அதே போல இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். அதில் அவர் தான் அடிக்கடி செய்யும் உடற் பயிற்சி வீடியோக்கள், நடன வீடியோக்கள் என்று பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
இதற்கிடையே இவர் இவர் திருமணம் செய்து கொண்டார். பின் இவருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தது. திருமணம் ஆன சில வருடங்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக நடிகை பிரகதி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

-விளம்பரம்-

இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சை:

தற்போது சிங்கிள் அம்மாவாக தன்னுடைய மகனை பிரகதி வளர்த்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பேட்டியில் கூட தனக்கு மறுமணம் செய்ய விருப்பம் இல்லை என்று பிரகதி பலமுறை கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை பிரகதி கூடிய விரைவில் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்று தெலுங்கு மீடியாவில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

பிரகதி பதிலடி:

இதை பார்த்து கோபமடைந்த நடிகை பிரகதி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்ன ஆதாரத்துடன் இப்படி பொய்யான செய்திகளை வெளியிட்டீர்கள். கொஞ்சமாவது பொறுப்புடன் இருங்கள். அடுத்தவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் அவர்களுடைய அனுமதி இல்லாமல் எப்படி இப்படியெல்லாம் எழுதலாம். இது மிகவும் தவறான செயல். பொறுப்பில் ஒரு பெரிய மீடியாவே இப்படி பொறுப்பில்லாமல் எழுதலாமா என்று கடுமையாக கண்டித்து பேசி இருக்கிறார். ஆனால், செய்தி வெளியிட்ட தெலுங்கு ஊடகம் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அந்த வீடியோவை நீக்கினார் பிரகதி.

Advertisement