8 வருட காதல், அளவுக்கு மீறிய லவ். இறுதியில் காதலர் குறித்து போட்டுடைத்த பிரியா பவானி.

0
12378
Priya-Bhavani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து உள்ளார். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B7z38ltjKBA/

கடந்த சில காலமாகவே பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாக சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தன்னுடைய காதல் குறித்தோ காதலர் குறித்து இதுவரை ஓப்பனாக தெரிவித்தது கிடையாது கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜவேல் இனப் பிறந்தநாளின்போது பிரியா பவானி சங்கர் ஒரு நீண்ட கவிதையை எழுதி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். குறிப்பாக அந்தப் பதிவில் நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை.

- Advertisement -

இதையும் பாருங்க : படப்பிடிப்பை தடுத்த கட்சியினர். விஜய்க்கு ஆதரவாக நின்ற ரசிகர்கள். போலீஸ் நடத்திய தடியடி. வெளியான வீடியோ.

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என்னுடைய உலகத்தில் என்றும் நீ ஒரு சூரிய ஒளியாக இருப்பாய் என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பிரிய பவனி சங்கரின் காதலர் இவர்தான் என்று கமெண்ட்டுகளை அள்ளி வீசினார்கள். ஆனால், அதற்கும் பிரியா பவானி சங்கர் எந்த பதிலையும் கூறவில்லை இந்த நிலையில் தனது காதலர் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

-விளம்பரம்-

வீடியோவில் 4:15 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

அந்தப் பேட்டியின் போது உங்களின் முதல் காதல் குறித்து சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டதற்கு நான் என்னுடைய முதல் காதல் குறித்தே கூறுகிறேன் என்று பேச ஆரம்பித்த பிரியா பவானி சங்கர், என்னுடைய கல்லூரியில் ஆரம்பித்து இப்போது வரை நான் சொல்லுகிறேன் என்னிடம் அளவுக்கு மீறிய அன்பை ஒரு நபர் காண்பிக்கிறார் என்றால் அது அவர்தான். என்னுடைய தந்தைக்கு நிகராக என்னை பார்த்துக் கொள்ள முடியும், உன்னுடன் இருக்க முடியும் என்றாள் அது அவர்தான். எது மாறினாலும் சரி, நான் எப்போதும் அவரிடம் சொல்லுவேன் நாம் இருவரும் தொழில்ரீதியாக வெவ்வேறு பாதையில் பிரிந்துவிட்டோம், பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, நாம் இருவருமே மாறிவிட்டோம். 18 வயதில் ஆரம்பித்த காதல் இப்போது நிறைய மாறி விட்டாலும் என்னுடைய அப்பாவிற்கு பின்னர் ஒருவரை யோசிக்கிறேன் என்றால் அது அவள் தான் என்று கூறியுள்ளார்.

Advertisement