சங்கத்தை பூட்டி சாவியை எடப்பாடிகிட்ட கொடுக்கணும்..!நடிகர் எஸ் வி சேகர் ஆவேசம்..!

0
1246
sv-sekar
- Advertisement -

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும் அவரை சுற்றி நிகழ்ந்து வருகிறது. தற்போது மேலும் ஒரு தலைவலியாக அவருக்கு தென்னிந்திய சங்கத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

பொதுக்குழுவை கூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடிய தயாரிப்பாளர்கள்.மேலும் நடிகர் விஷால் பதவி விலக கோரி தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சக தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையும் படியுங்க : தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல்..!நடிகர் விஷ்ணு விஷால்..!

- Advertisement -

சங்கத் தலைவர் விஷால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சுய லாபத்துடன் செயல்படுகிறார். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தை இன்னும் கூட்டவில்லை. பட வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக விஷால் அமைத்த குழு பாரபட்சமாக நடந்து கொள்வதால் பட வெளியீட்டில் சிக்கல் நிலவுகிறது என்றும் பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

மேலும், நடிகர் விஷால் பணம் சம்பாதிக்கவே இளையராஜாவிற்கு பாராட்டு விழா வைத்ததாக குற்றம் சட்டியுள்ள நடிகர் எஸ் வி சேகர். நடிகர் சங்கத்தை பூட்டி சாவியை எடப்பாடி பழனி சாமியிடம் ஒப்படைக்கபோவதக காட்டத்துடன் கூறியுள்ளார்.  

-விளம்பரம்-

Advertisement