சினிமா திரை உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மந்த்ரா. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து உள்ளார். அதுவும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்து உள்ளார். ஒரு காலத்தில் இவர் தமிழில் இளம் நடிகர்களான அஜீத், விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். நடிகை மந்த்ரா அவர்கள் நடிகர் அருண் விஜய்யின் படத்தில் அறிமுக நாயகி என்பதை விட தல அஜித் அவர்களின் ‘ரெட்ட ஜடை வயசு’ என்ற திரைப்பட நாயகி என்று சொன்னாலே தான் எல்லாருக்கும் தெரியும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
பின் இவர் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை மந்த்ரா ஹைதராபாத்தில் செட்டில் ஆகி விட்டார். அதுமட்டும் இல்லாமல் நடிகை மந்த்ரா திருமணத்துக்கு பிறகு தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் மட்டும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதற்க்கு பிறகு நடிகை மந்த்ரா அவர்கள் தமிழில் வெளி வந்த ஒன்பதுல குரு படத்திலும், சிம்பு ஹன்சிகா நடித்த வாலு படத்திலும் சின்ன வேடம் ஒன்றில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை மந்த்ராவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. மேலும்,கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை மந்த்ரா அவர்கள் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.
இதையும் பாருங்க : நயன் மற்றும் விக்கிக்கு வெளிநாட்டில் பார்ட்டி கொடுத்த ஸ்ரீதேவி மகள். வைரலாகும் புகைப்படம்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை மந்த்ரா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் தேஜா என்பவர் என்னை கதை சொல்லி ஏமாற்றி உள்ளார். அதோடு அந்த நாட்களில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெறும். அந்த நிலையில் தான் இயக்குனர் தேஜா என்னை வந்து சந்தித்தார். அப்போது எனக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். மேலும்,அவர் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி கூறி இருந்தார். அதில் நடிகர் கோபிசந்த் உடன் இணைந்து நடிப்பதாகவும், காதல் காட்சிகள் இருப்பதாகவும் கூறி இருந்தார். இதனை நம்பி நான் படத்தில் நடிக்க சம்மதித்தேன். இதனால் நான் அவரிடம் முன் பணமும் பெற்றுக் கொண்டேன்.
படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கிய போது என்னுடைய கதாபாத்திரம் அவர் கூறியது போல இல்லை எதிர்மறையாக இருந்தது. இதைப் பற்றி தெரிந்தும் நான் திரைப் படத்தை விட்டு விலகாமல் நான் நடித்தேன். அதுமட்டும் இல்லாமல் இத்தனை நாள் என் திரை உலகில் சம்பாதித்த பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்து தான் நான் நடித்தேன். எனக்கு இது மிக வருத்தமான செய்தியாக இருந்தது என்று கூறினார். அதோடு நடிகை மந்த்ரா அவர்கள் சினிமா துறையில் மீண்டும் நடிக்க வருவதாகவும் தகவல் வந்து உள்ளது. அதுவும் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.