சீனிவாசன் இயக்கியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளார் ராதிகா நிறைய பேசினார்.
குறிப்பாக படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனியைப் பற்றி பேசினார். அவர் பேசியதாவது,இந்த கதையை நான் படமாக தயாரிக்கிறேன் என்றவுடன் எதுவும் பேசாமல் ஒப்புக் கொண்டார் விஜய் ஆண்டனி.
அவரிடம் பல விஷயங்களை கவனித்தேன், அதில் எனக்கு பிடித்தது ஒன்று உண்மை மற்றொன்று உழைப்பு. இந்த இரண்டும் எனக்கு பிடிக்கும். நான் நம்புவது உழைப்பு தான், என்னை எவ்வளவு நேரம் வேலை செய்ய சொன்னாலும் செய்வேன் அந்த அளவிற்கு உழைப்பினை நம்புவேன் நான்.
அதே போல் பின்னால் வரும் எந்த பிரச்சனைனயும் பார்க்காமல் உண்மையைப் பேசுவேன். இந்த இரண்டும் விஜய் ஆண்டனியிடம் உள்ளது.
இப்படித்தான், விஜய் என பெயர் வைத்தாலே சூப்பராக மாறிவிடுகின்றனர். அது, ‘விஜய் ஆண்டனியாக இருந்தாலும் சரி, ‘ஜோசப் விஜயாக’ இருந்தாலும் சரி. பார்ப்பதற்கு அமைதியான ஆட்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களிடம் தான் திறமைகள் கொட்டிகிடக்கும்.
எனக் கூறினார் ராதிகா