ராதிகா கர்ப்பம் கலைந்தது, அதிர்ச்சியில் கோபி, ஈஸ்வரி எடுக்கும் முடிவு – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
112
- Advertisement -

ராதிகா கர்ப்பம் கலைந்து வீட்டில் நடக்கும் கலவரம் தொடர்பாக வெளியாகி இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலின் புது ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பாக்கியா சுற்றி கொண்டிருக்கிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறந்தார். பழனிசாமிக்கு பாக்யா மீது காதல் ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். இந்த உண்மையை பாக்யா கண்டுபிடித்து ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். பின் வீட்டில் எல்லோருக்கும் இந்த உண்மை தெரிந்து அதிர்ச்சி ஆகி கோபியை திட்டுகிறார்கள்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

ஈஸ்வரிக்கு ராதிகா குழந்தையை பெற்று கொள்வதில் விருப்பம் இல்லை, கலைத்து விடு என்று சொல்கிறார். மேலும், கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று விடுகிறார். பின் ஈஸ்வரி, ராதிகா அம்மா இடையே கலவரங்கள் சென்று கொண்டிருக்கின்றது. ஈஸ்வரி வந்தது ராதிகா அம்மாவிற்கு பிடிக்கவில்லை. ஈஸ்வரி தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். அவர் வேணும் என்றே ராதிகா, அவருடைய அம்மாவை வம்பிழுப்பது கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் ஈஸ்வரி சரியாக சாப்பிடாமல் மயக்கம் போட்டு விழுந்தார்.

சீரியல் கதை:

இதனால் கோபி, ராதிகாமீது பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப் பின் தன்னுடைய அம்மாவை கோபியே நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறார். ஹோட்டல் வேலை பார்ப்பது, தன்னுடைய அம்மாவை கவனிப்பது என்று பம்பரம் போல கோபி சுத்திக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் ராதிகாவிற்கு கோபம் கோபமாக வருகிறது. இன்னொரு பக்கம் பாக்கியா ரெஸ்டாரன்ட் பக்கத்திலேயே பழனிசாமி கடை ஒன்று திறந்து இருக்கிறார். இன்று எபிசோட்டில், வீட்டில் இனியாவுக்கு பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இந்த பிறந்தநாள் விழாவிற்கு பழனிசாமியின் அக்கா மற்றும் அம்மா வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

அவர்கள் பாக்கியாவை பழனிசாமிக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து பேசி இருக்கிறார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபி பாக்கியாவிடம் பயங்கரமாக கோபப்பட்டு பேசுகிறார். அத்துடன் சீரியலை முடிக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கால் தடுமாறி ராதிகா கீழே விழுந்து விடுகிறார். பின் மருத்துவர்கள், ராதிகா கர்ப்பம் கலைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். இதனைக் கேட்டு கோபமடைந்த ராதிகா, உன் அம்மா தான் என்னை தள்ளிவிட்டார் என்று சொல்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

உடனே கோபி, நீங்கள் குழந்தை வேண்டாம் என்று சொல்லி சொல்லி கடைசியில் என் குழந்தையே இல்லாமல் போய்விட்டது என்று வருத்தப்பட்டு பேசுகிறார். இதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி உடைந்து போய் விடுகிறார். இந்த விஷயம் பாக்யாவுக்கு தெரிய வருகிறது. இனி வரும் நாட்களில் ஈஸ்வரி, ராதிகா வீட்டில் இருப்பாரா? கோபி என்ன செய்யப் போகிறார்? ராதிகா எடுக்கும் முடிவு என்ன? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement