தமிழ் சினிமாவில் 80ஸ் களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதிகா தற்போது ராதிகா பாட்டியாக மாறியுள்ளார். இதனால் அவருக்கு பல்வேறு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிரபல தமிழ் சினிமா நடிகையான ராதிகா, தமிழில் ரஜினி, கமல் , விஜயகாந்த என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சரத் குமாரை திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார்.
இவரது மகளான வரலாக்ஷி சரத்குமாரை நம் அனைவருக்குமே தெரியும். மேலும், நடிகை ராதிகவிற்கு ராயானி என்று மகளும் இருக்கிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் , சினிமா பிரபலங்களும் நேரில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் சரத் குமார், ராதிகாவின் மகளான ராயானிக்கு நேற்று (ஜூன் 7) ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை ராதிகா சரத் குமார் ‘மிக்க மகிழ்ச்சி கடவுளின் ஆசியால், ஆண் குழந்தை ‘ என்று பதிவிட்டுள்ளார். ராதிகா பாட்டியாணதையடுத்து ரசிகர்கள் ராதிகவிற்கு ட்விட்டவ்ரில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வருகின்றனர்.