திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பா. ரஞ்சித் செய்து செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகிவரும் நிலையில் அவரை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பிகே திரைப்பட விழா குறித்த செய்திகள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தங்களுடைய நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழாவை வருடம் வருடம் நடத்தி வருகிறார்.
ரஜினிக்கு @rajinikanth புரியாம அந்த படங்களை செய்தாரா என்ற கேள்விக்கு ஒரு சிரிப்பு சிரித்தாரே ரஞ்சித் @beemji "சோலி முடிஞ்சது" மொமெண்ட்ஸ்.
— Tamil Pokkisham - Vicky (@vickneswarang) April 12, 2024
ஆனால் ரஞ்சித் உங்களுக்கு புகழ் தேடி தந்த ரஜினிக்கு இது ஒன்றும் புதிது இல்லை. அவர் முதுகில் குத்திய நபர்களில் இந்த சிரிப்பு நிரைந்த நீயும்… pic.twitter.com/rtAcwiXWDC
அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழா கடந்த எட்டாம் தேதி தொடங்கி நேற்று முன் தினம் தான் நிறைவடைந்து இருக்கிறது. இந்த விழாவில் நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலந்து இருந்தார்கள். இதில் தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல மொழி திரைப்படங்கள் மற்றும் ஆவண படங்கள் திரையிடப்பட்டது.
பிகே ரோஸி திரைப்பட விழா:
அதோடு பல்வேறு தலித் இயக்குனர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலித் சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். கேரளா திரைப்படத் துறையில் தலித் இயக்கம் பரவுவதில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள். அந்த வகையில் மலையாள இயக்குனர் பிஜு தாமோதரன் அவர்கள் பல விஷயங்களை பகிர்ந்தார். அப்போது அவர் மேடையில் காலா படத்தில் ரஜினிகாந்த் போன்ற ஒரு ஸ்டார் நடித்ததை பெரிய விஷயம்.
https://www.youtube.com/watch?v=uniH1_X80r0&t=11s
மேடையில் ரஞ்சித் செய்தது:
அது ரஞ்சித்தின் அரசியல் என்று ரஜினிகாந்துக்கு தெரியுமா? என்பது சந்தேகம் தான் என்று சொன்னவுடன் ரஞ்சித் மேடையிலேயே நக்கலாக சிரித்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் அங்கிருந்த எல்லோருமே சிரித்து இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலருமே, நன்றியை மறக்கக்கூடாது. ரஜினியை வைத்து படம் பண்ணிய நான் தான் நீ இந்த இடத்தில் இருக்கிறாய்.
நெட்டிசன்கள் கண்டனம்:
ரஜினியை வைத்து படம் எடுப்பதற்கு முன்பு இருந்த ரஞ்சித்துக்கும், இப்போது இருக்கும் ரஞ்சித்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்றெல்லாம் மோசமாக இயக்குனர் ரஞ்சித்தை திட்டி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ ரஜினி ரசிகர்கள் பலரும் ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் எக்ஸ் தளத்தில் 'நன்றி கெட்ட ரஞ்சித்' என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.
https://twitter.com/Kaalakabali_ON/status/1778841504376877176
சத்யன் ராமசாமி விலாசல் :
அதே போல ரஞ்சித்தின் இந்த செயலை கண்டித்து ரஜினியின் தீவிர ரசிகரான சத்யன் ராமசாமி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர் ரஜினியால் தான் ரஞ்சித் என்பவரே சினிமா உலகில் தெரிய வந்தார். ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களுக்கு பின்னர் தான் ரஞ்சித் வீடே சோறு சாப்பிட்டனர் என்று ரஞ்சித்தை பிச்சைக்காரா, பன்னாட என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.





