21 ஆண்டுகளாக ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர் – நேரில் அழைத்து ரஜினி கொடுத்த பயனுள்ள பரிசு.

0
1788
- Advertisement -

ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்யும் சமூக சேவகர் மணிமாறனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவருக்கு 37 வயதாகிறது. இவர் தன்னுடைய 16 வயதில் இருந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல பேர் இறந்துவிட்டால் அவர்கள் உடல்கள் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் யாரும் கேட்க ஆளில்லாமல் பல நாட்கள் இருக்கும்.

-விளம்பரம்-

அந்த ஆதரவற்ற பிணங்களின் உடல்நிலை பெற யாருமே வர மாட்டார்கள். பின் அந்த உடல்களை போலீசார் அனுமதி உடன் வாங்கி மணிமாறன் நல்லடக்கம் செய்து வருகிறார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளாக இந்த பணியை இவர் ஆத்மார்த்தமாக செய்து வருகிறார். இதுவரை இவர் 2045 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்து இருக்கிறார். மேலும், இவருடைய இந்த சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கியிருக்கிறது.

- Advertisement -

மேலும், பல மாநில முதலமைச்சர்களும் இவரை பாராட்டி இருக்கிறார். அதோடு இவர் உலக அளவில் சாதனையாளர் விருது, கவுரவ டாக்டர் பட்டம் போன்றவை எல்லாம் மணிமாறனுக்கு கிடைத்திருக்கிறது. கொரோனா காலத்திலும் மணிமாறன் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்திருந்தார். தொழுநோயாளிகளுக்கு கூட இவர் முகம் சுளிக்காமல் சேவையாற்றி இருக்கிறார். இந்த நிலையில் மணிமாறன் சேவையை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் இந்த சேவையை தொடர்ந்து செய்ய தன்னுடைய அறக்கட்டளையின் சார்பில் எட்டு லட்சம் மதிப்புள்ள ஒரு ஆம்புலன்ஸை வழங்கி இருக்கிறார்.

மணிமாறன் அளித்த பேட்டி:

அது மட்டும் இல்லாமல் மணிமாறன் சேவைக்கு வாழ்த்துகளையும் செய்திருக்கிறார். மேலும், இது குறித்து மணிமாறன் கூறியிருப்பது, நான் 21 ஆண்டுகளாக ஆதரவற்றவர்களின் உடலை அடக்கம் செய்து வருகிறேன். இந்த உடல்களை கொண்டு செல்வதற்காக நான் வாடகை வண்டியை தான் பயன்படுத்தி இருக்கிறேன். இப்படி இருக்கும் நிலையில் என்னுடைய சேவையை பற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் என்னை சந்திக்க விரும்புவதாக அவருடைய உதவியாளர் மூலம் என்னிடம் பேசினார்.

-விளம்பரம்-

ரஜினிகாந்த் சந்திப்பு:

நான் திருவண்ணாமலையில் அவர்களுக்காக காத்திருந்தேன். காலையில் ரஜினிகாந்த் வீட்டிலிருந்து அவரது உதவியாளர் காரில் திருவண்ணாமலைக்கு வந்து என்னை சென்னையில் உள்ள ரஜினி வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். அவர் முதலில் எனக்கு உணவு கொடுத்தார்கள். பின் ரஜினி அவர்களிடம் நான் 20 நிமிடம் பேசினேன். அப்போது அவர் என்னுடைய சேவையை பாராட்டினார். அது மட்டும் இல்லாமல் எனக்கு ஆம்புலன்ஸும் வழங்கினார். எப்படி இவ்வளவு காலம் இந்த பணியில் ஈடுபட முடிகிறது என்று கேட்டார்.

ரஜினி சொன்ன அறிவுரை:

பின் குடும்ப வாழ்க்கையை மிகவும் அவசியம். இன்றும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள். நான் முடிந்த அளவு உதவிகளை செய்கிறேன் என்று கூறி ஆசீர்வாதம் செய்தார். நான் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வந்து விட்டேன். ரஜினிகாந்த் அவர்கள் ஆம்புலன்ஸ் தந்தது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. அவருடைய இந்த உதவி எனக்கு சந்தோஷத்தையும் இன்னும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இந்த ஆம்புலன்ஸ் மூலம் ஆதரவற்றவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியும். முதியோர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியும் என்று சந்தோஷமாக கூறியிருந்தார்.

Advertisement