மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துகொண்டு இருந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற கட்சியை துவங்கினார் ரஜினி. எனவே, ரஜினி விரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் நிலை பிரச்சனை காரணமாக தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்து இருந்தார் ரஜினி.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வரப் போவது இல்லை என்று ஆணித்தனமாக கூறிவிட்டார். மேலும், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிகர் பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன ? நிலை என்ன ? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதையும் பாருங்க : விஜய் கையில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா ? இப்போ இந்த சீரியல்ல ஹீரோயினா நடிக்கிறாங்க.
அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை. நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதிவுகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியல் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கு இல்லை.
ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்பு அணிகள் ஏதுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள் இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என்று தெரிவித்திருக்கிறார்