தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தின் மூலம் ரசிகர்களை பரிச்சயமானார். மேலும், சூர்யா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாஸ் படத்தில் சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்து இருந்தார்.
இறுதியாக விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினிகணேசனும் சூரிலிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் வாய்ப்பு இல்லை என்றாலும் தற்போது கன்னடம், தெலுங்கு போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பிரணிதா சுபாஷ்.
இவர், அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் ஆனால் சமீபத்தில் இவர் பிரபல நாளிதழை அட்டைப்படத்திற்கு வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களின் கேள்விக்கு உள்ளாகி வருகிறது.