சலங்கை ஒலி இயக்குனர் – விஜய், அஜித், விக்ரம் பட நடிகர் விஸ்வந்தான் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி.

0
508
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி கே.விஸ்வநாத் நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் கலக்கியவர். இவர் தமிழ் ஹிந்தி என பழமொழிகளில் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே பெரிய வெற்றி பெற்று இருக்கின்றன. இவர் 1965 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் அக்னேனி நாகேஸ்வரர் நடிப்பில் வெளியான “ஆத்ம கௌரவம்” என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகினார்.

-விளம்பரம்-

பன்முக திறமை கொண்டவர் :

அப்போது வெளியாகிய அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து இவருக்கு பெரிய பேரையும், புகழையும் ரசிகர்கள் மத்தியில் பெற்றுத்தந்தது. அதற்கு பிறகு பல படங்களை இவர் இயக்கி வெற்றி பெற்றுள்ளார். இவர் இயக்கிய படங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சங்கபுராணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இவருக்கு பெயரை பெற்று தந்தது. மேலும் கமலஹாசனுக்கு மிகவும் பிடித்த மனிதராக கே விஸ்வநாத் இருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

- Advertisement -

நடித்த படங்கள் :

இதில் சலங்கை ஒழி, முத்து போன்ற படங்களில் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருந்தார் தமிழ், மலையாளம். தெலுங்கு என மூன்று மொழிகளில் இப்படங்கள் வெளியாகி இருந்தது. இப்படத்தில் இயக்குனராகிய இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் இறங்கிய இவர் தமிழ் சினிமாவில் குறிப்பாக கமலஹாசனின் உடல் உத்தவில்லின், 2000ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் முகவரி, பின்னர் 2003ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் புதிய கீதை, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி போன்ற படங்களில் விசுவநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தால் என் கூட குறிப்பிடத்தக்கது.

வயது மூப்பு காரணமாக :

இப்படி தான் சினிமாவில் சேர்ந்த காலத்தில் இருந்து சினிமா துறையில் இயக்குனர், நடிகர் என மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் விஸ்வநாத் அவர்களும் ஒருவர். 1930ஆம் ஆனது பிறந்த இவர் தன்னுடைய வயது மூப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில். தற்போது தன்னுடைய 92 வயதில் கே விஸ்வநாத் காலமானார் என்ற செய்தியை வெளியாகியுள்ளது. இவருடைய இழப்பிற்கு பல சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

கமலஹாசன் ட்விட் :

இந்நிலையில் கமலஹாசன் தன்னுடைய இரங்கல் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் “கலாதபஸ்வி கே. விஸ்வநாத் காரு அவர்கள் வாழ்வின் திருவுருவத்தையும் கலையின் அழியாத தன்மையையும் முழுமையாகப் புரிந்துகொண்டார். எனவே அவரது கலை அவரது வாழ்நாள் மற்றும் ஆட்சிக்கு அப்பால் கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தவிர பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement