தென்னிந்திய சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்து வரும் ஸ்ரீரெட்டி சமந்தாவின் விவகாரத்து விஷயத்தில் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்த நாக சைதன்யா - சமந்தா ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவகாரத்து செய்வதாக அறிவித்து இருந்தனர். இவர்களுடைய பிரிவு குறித்து காரணங்கள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம்இருந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தாவும் தன் சமூக வலைதளத்தில் விளக்கம் கூறி இருந்தார். இந்த நிலையில் சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்குக் காரணம் சமந்தாவின் டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கர் தான் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி இருந்தனர். இதுகுறித்து ப்ரீத்தம் தெரிவித்த போது, இவ்வளவு நடந்தும் நாக சைதன்யாவின் அமைதி எனக்கு கவலையளிக்கிறது. சமந்தா எனக்கு சகோதரி போன்றவர்.
இதையும் பாருங்க : டாஸ்க்னா இப்படி இருக்கனும் சர்வைவரின் புதிய ப்ரோமோ - பிக் பாஸுக்கு அறிவுறுத்தும் நெட்டிசன்கள்.
நான் அவரை எப்போதுமே ஜிஜி என்று தான் அழைப்பேன். இது அனைவருக்குமே தெரியும். எங்களை எப்படி ஒருவர் தொடர்புபடுத்திப் பேச முடியும்? மேலும், எனக்கு நாக சைதன்யாவை பல ஆண்டுகளாக தெரியும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையே உள்ள உறவு முறை என்னவென்று அவருக்கும் தெரியும்.

என்னையும், சாமையும் பற்றி யாரும் அப்படி பேச வேண்டாம் என்று நாக சைதன்யா வாய் திறந்து பேசி இருக்கலாம். இது குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியீட்டு இருந்தால் கூட அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி சமந்தா விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், சமந்தாவிற்கு பிரீதம் ஜுகல்கர் உடனான நட்பால் விவகாரத்து ஏற்பட வாய்ப்பே இல்லை. ஏனென்றால் ப்ரீத்தம் ஒரு ஓரின சேர்க்கையாளர். அதனால் அவர்கள் இருவருக்கும் எந்த வித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சமீப காலமாக சமந்தா மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த விஷயத்தில் கூட பிரச்சனை உண்டாகி அவர்கள் பிரிவிற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.





