“எல்லை தாண்டிய காதல்” பிரிந்த சானியா மிர்சா – சோயப் மாலிக் தம்பதி. இது தான் காரணமா ?

0
540
- Advertisement -

சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் இருவரும் விவாகரத்து செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் கடந்த 1986ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். தனது ஆறு வயதிலேயே டென்னிஸ் விளையாட்டை பயின்றவர் சானியா மிர்சா. பின் இவர் டென்னிஸ் விளையாட்டில் பல கோப்பைகளை வென்று இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்று இருக்கிறார். பின் இந்தியாவின் டென்னில் வீராங்கனையான சானியா மிர்சா அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நடைப்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து இருந்தார்கள்.

- Advertisement -

சானியா மிர்சா- சோயப் மாலிக் விவாகரத்து:

கடந்த 2018 ஆண்டு சானியா மிர்சாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. சானியா-மாலிக் தம்பதி தங்களது குழந்தைக்கு இஜான் மிர்சா மாலிக் என்று பெயர் சூட்டினர். இவர்கள் இருவரும் தன் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள். இந்நிலையில் சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் இருவரும் விவாகரத்து செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

பிரிவை உறுதி செய்த நபர்கள்:

இதை கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், இது குறித்து பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் கூறி இருப்பது, இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று இருக்கின்றனர். சானியா மிர்சா இந்தியாவில் தான் வசித்து வருகிறார். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

பிரிவிற்கு காரணம்:

அதுமட்டும் இல்லாமல் சோயப் துரோகம் செய்து ஏமாற்றியதை சானியா கண்டுபிடித்ததனால் தான் இவர்கள் இருவருமே பிரிந்து வாழ்ந்துள்ளனர். பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் விவாகரத்து செய்து இருக்கிறார்கள். தற்போது இவர்கள் தங்களுடைய மகன் இசானுக்கு மட்டும் பெற்றோர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட சோசியல் மீடியாவில் சானியா பதிவு ஒன்றே போட்டு இருந்தார்.

சானியா மிர்சா பதிவு:

அதில், உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை காண! என்று குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சானியா மிர்சாவிற்கு ஆறுதல் கூறியிருந்தார்கள். சமீபத்தில் கூட இருவரும் தங்கள் மகனின் பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடி இருந்தார்கள். அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இருவரும் பிரிந்து விட்ட செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement