ஆரம்பம் ஆகும் முன்பே மாற்றப்பட்ட விஜய்யின் நெருங்கிய நபர் – கிழக்கு வாசல் சீரியலில் திடீர் மாற்றம் ஏன் ?

0
997
Radhika
- Advertisement -

டிவியில் ஒளிபரப்பாகும் முன்னே நடிகர் சஞ்சீவ் சீரியலில் இருந்து மாற்றம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் சஞ்சீவ். இவரை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்..நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன்பின்னர் சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். நீண்ட வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் சஞ்சீவ். மேலும், சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பிரபலம் தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் தான் சஞ்சீவ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சஞ்சீவ் குறித்த தகவல்:

அதிலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் இவர் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். மேலும், இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிப்பது மட்டுமில்லாமல் தொகுப்பாளராக டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சஞ்சீவ்:

குறிப்பாக, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாநாடு மயிலாடு நிகழ்ச்சியை சஞ்சீவ் தான் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

கிழக்கு வாசல் சீரியல்:

இந்நிலையில் சீரியலில் இருந்து சஞ்சீவ் மாற்றம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ராதிகா சரத்குமார் தயாரிக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடிக்க சஞ்சீவ் ஒப்பந்தமானார். இந்த சீரியலில் ரேஷ்மா, ஏ எஸ் சந்திரசேகர் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சீரியலில் விலகிய சஞ்சீவ்:

இந்த சீரியல் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் மாற்றப்பட்டு இருக்கிறார். இவர் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். தற்போது இவருடைய ஹீரோ கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள்? என்று தெரியவில்லை. ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement