ஈஷா யோகா சிவராத்திரி – ‘சிவாய நம’ சத்குரு சொல்ல சொல்ல மனமுருகி அழுத சந்தானம் – ரசிகர்களின் கமெண்ட்ஸ்

0
410
- Advertisement -

சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் நடிகர் சந்தானம் மனம் உருகி அழுது இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் வருடம் வருடம் மஹா சிவாரத்திரி கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று. இந்த விழாவை சிவ பக்தர்கள் சிகோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த சிவராத்திரியில் இரவு முழுவதும் கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ தூங்காமல் கண் முழித்து சிவபெருமானை சிவ பக்தர்கள் வழிபடுவார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் கோவில்களில் சிவராத்திரி என்று நடை சாத்தாமல் பூஜைகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் வெள்ளியங்கிரியில் உள்ள ஈசா யோக மையம் சிவராத்திரி விழாவிற்கு பெயர் போனது. கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் சார்பில் மிகப்பெரிய சிவராத்திரி விழா மையம் ஈஷா யோகா மையம் துவங்கப்பட்ட நாளில் இருந்தே ஆண்டு தோறும் இங்கே சிவ ராத்திரி பூஜை கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல சிவராத்திரி பூஜை என்ற பெயரில் இங்கே நடக்கும் நிகழ்ச்சிகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

- Advertisement -

சற்குரு தலைமையில் சிறப்பு தியான நிகழ்ச்சி எல்லாம் நடைபெறும். இந்த விழாவிற்கு சிவ பக்தர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விஐபிகள், விவிஐபிகள், பொதுமக்கள் என்று பல பேர் கலந்து கொள்வார்கள். அதிலும், சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகள் சத்குருவின் பக்கதர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டும் ஈஷா மையத்தில் நேற்று சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், இந்த சிவராத்திரி விழாவில் இசை கச்சேரி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்:

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரா சேனா ரெட்டி, தமிழக இணை அமைச்சர் எல்.முருகன், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பின் இதில் தென்னிந்திய பிரபலங்களான தமன்னா, சந்தானம் உட்பட பல பேர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது பிரம்ம முகூர்த்தத்தில் நடந்த தியானத்தில் நடிகர் சந்தானம் அவர்கள் மனமுருகி வேண்டி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படம் தான் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

ஈஷா மையத்தில் சந்தானம்:

ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு கோவில் அடிமைத்தனத்தை நிறுத்த வேண்டும் என்று சோசியல் மீடியாவில் எல்லாம் சற்குருவிற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், நடிகர் சந்தானம் அவர்கள் சத்குரு சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். சற்குருவின் தீவிர பக்தர் சந்தானம் என்றே சொல்லலாம். அதேபோல் மகா சிவராத்திரி நிகழ்ச்சியிலும் சந்தானம் தவறாமல் கலந்து கொள்வாராம்.

சந்தானம் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து இருக்கிறார். ஆனால், சமீப காலமாக சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி, குலு குலு, ஏஜென்ட் கண்ணாயிரம்,கிக் போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. அந்த வகையில் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

Advertisement