சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சக்கை போடு போடுராஜா படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த மாத இறுதியில் கோலாகலமாக நடைபெற்றது. மேலும், இதே படவிழாவில் கலந்து கொண்ட சிம்பு, நடிகர் சிம்பு AAA படத்தின் பிரச்சனைகளைப் பற்றியும், அவருக்கு என்ன பிரச்சனை என்பது பற்றியும் பலவற்றை பேசினார்.
இந்த விழாவிற்கு எப்போதும் இல்லாத வகையில் சந்தானம் தனது மகனை அழைத்து வந்திருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது,
விழா அன்று அவனை வருகிறாயா என்றுதான் கேட்டான், உடனே கோட் சூட் எல்லாம் எடுத்து மாட்டிக்கொண்டு நான் ரெடி என கிளம்பிவிட்டான். அவ்வளவு தயாராக உள்ளான் எனக் கூறி எனக்கு மேல என் மகன் ட்ரெண்ட் ஆகிவிட்டான் சிரித்தார் சந்தானம்.
அதேபோல் சிம்பு, சந்தானம் மகனிடம், உன்னை நான் தான் திரையில் ஹீரோவாக அறிமுகப்படுத்துவேன் எனவும் கூறினார், இதனைக் கேட்டதும் இன்னும் ஜாலியாவிட்டான் என் மகன், எனக் கூறினார் சந்தானம்.