விஜய் டீவியில் பல ஆண்டுகளாக ஓடி வரும் சீரியல் சரவணன் மீனாட்சி. முதலில் ஆர்.ஜே மிர்ச்சி சரவணன், முதல் தலைமுறை சரவணன்-மீனாட்சியில் சரவணனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக ஶ்ரீஜா நடித்தார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஒரு வழியாக சீரியலின் முதல் தலைமுறை முடிய, உடனடியாக அவர்களது குழந்தைகளை வைத்து இரண்டாவது தலைமுறை சரவணன் மீட்னாட்சியை ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கிறது. மீனாட்சியாக ரக்சிதா நடித்து வருகிறார்.
தற்போது அவருக்கு சரவணனாக ரியோ ராஜ் நடித்து வருகிறார். இவருக்கு முன் கவின் மற்றும் இர்ஃபான் முகமது ஆகியோர் மீனாட்சிக்கு சரவணனாக நடித்தனர்.
ஆனால், ரியோ ராஜுக்கு முன்னர் அவருக்கு பதிலாக தேர்வானவர் சஞ்சீவ் தான். அவர் தற்போது விஜய் டீவியில் ஒளிபரப்பப்படும் ராஜா ராணி சீரியலில் நடித்து வருகிறார்.
ரக்சிதாவிற்கு ஜோடியாக சஞ்சீவை பார்க்கும் போது அவர் சற்று குட்டையாக தெரிந்துள்ளார், அதன் காரணமாக அவருக்கு பதில் ரியோவை தேர்வு செய்துள்ளனர்.