அமீருக்கு சிலம்பிளாக வருத்தம் தெரிவித்த ஞானவேல் – பதிலடி கொடுக்கும் விதமாக சசிகுமார் வெளியிட்ட அறிக்கை.

0
449
- Advertisement -

ஞானவேல் ராஜாவின் மன்னிப்பு அறிக்கையை விமர்சித்து சசிகுமார் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே அமீர்-ஞானவேல் ராஜா தான். சமீபத்தில் பேட்டியில் அமீர், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை. பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சிவக்குமார், சூர்யா, கார்த்திக் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார். அவரால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம். அவரிடம் எனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியும் நீதி கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார். இதனை அடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் என்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி இருக்கிறார். அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கி கொடுப்பதாக சொன்னார்.

- Advertisement -

பருத்திவீரன் சர்ச்சை:

சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காபி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு வருடங்களில் 4 கோடி வரை செலவு செய்தார். என்னை மட்டும் இல்லாமல் இன்னும் சில தயாரிப்பாளர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அமீர் மோசடி செய்து இருக்கிறார். அமீர் ஒரு திருடன் என்று விமர்சித்து கூறியிருக்கிறார். தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இந்த விவகாரம் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மேலும், ஞானவேல் ராஜாவை விமர்சித்து இயக்குனர் சமுத்திரக்கனி, சசிகுமார், சுதா, பொன்வண்ணன், சினேகன், பழனியப்பன், பாரதிராஜா என பல பிரபலங்கள் கடுமையாக கண்டித்து பேசி இருந்தார்கள்.

ஞானவேல் ராஜா மன்னிப்பு அறிக்கை:

இப்படி கோலிவுட் வட்டாரத்திலேயே அமீரின் விவகாரம் பயங்கர பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக், சூர்யா இருவருமே அமைதி காப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இப்படி அனைவருமே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக திரும்பி உடன் ஞானவேல் அமீரிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில், பருத்திவீரன் ஒன்றை பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்துகொண்டு இருகிறது. இதுநாள் வரை அதை பற்றி நான் பேசியது கிடையாது. என்றைக்குமே அவரை நான் அமீர் அண்ணா என்று தான் அழைப்பேன்.

-விளம்பரம்-

அமீர் குறித்து சொன்னது:

ஆரம்பித்தில் இருந்தே அவர் குடும்பத்தினருடன் அழைப்பேன். பழகி இருக்கிறேன். சமீபத்திய பேட்டிகளில் என்ன குறித்து அவர் கூறிய பொய்யான குற்றசாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.அதற்கு பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அமீர் அண்ணன் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் என்று கூறி இருக்கிறார்.

சசிகுமார் அறிக்கை:

இந்த நிலையில் ஞானவேல் ராஜாவின் அறிக்கைக்கு எதிராக நடிகர் சசிகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால், அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்னமாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

Advertisement