தெறி படத்தை தொடர்ந்து படையப்பா சீனை கண்டம் பண்ண சத்யா சீரியல் – கதறும் ரஜினி ரசிகர்கள்.

0
702
- Advertisement -

பொதுவாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் கொரானா தொடங்கிய காலத்திலிருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அதிலும் சில தொடர்கள் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதில் ஒன்று தான் சத்யா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் சத்யா. இந்த தொடர் காதல் பின்னணியை மையமாக கொண்ட தொடர். மேலும், ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிந்துரா பிந்து’ என்ற ஒடியா மொழித் தொடரின் மறு ஆக்கம் தான் சத்யா சீரியல். இந்த தொடரில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இதையும் பாருங்க : பிரம்மாண்ட வீட்டில் வாழ்ந்து இறந்த விவேக் சிறு வயதில் வாழ்ந்த வீடு இது தான் – அங்கும் வளைர்ந்து நிற்கும் மரங்கள்.

- Advertisement -

சத்யா சீரியல் :

மேலும், ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாக வைத்து கொண்டது தான் சத்யா சீரியல். இந்த தொடர் ஒளிபரப்புச் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், இடையில் திடீரென்று இந்த தொடர் நிறுத்தப்படுவதாக ஜீ தமிழ் சேனல் அறிவித்து இருந்தது. இந்த அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் புலம்பித் தள்ளி இருந்தார்கள்.

சத்யா 2 சீரியல் :

பின் மக்கள் பலரும் கேட்டுக் கொண்டதன் காரணமாக இந்த சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. ஆனால், நடிகர் விஷ்ணு தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சத்யா 2 சீரியல் குறித்த மீம்ஸ்:

கடந்த சில வாரங்களாக இந்த தொடரை பலரும் கேலி செய்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே சமீப காலமாக சினிமாவில் வரும் காட்சிகளை அப்படியே Bgm கூட மாறாமல் காப்பி அடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் வரும் காட்சியை காப்பி அடித்து செய்திருக்கிறார்கள். அதாவது, படத்தில் விஜய் திருடன்களை ரைம்ஸ் சொல்லி அடிப்பார். அதையே தான் சத்யா 2 சீரியலில் சத்யா ரவுடிகளை ரைம்ஸ் சொல்லி அடிக்கிறார்.

தெறியை தொடர்ந்து படையப்பா :

இப்படி ஒரு நிலையில் தெறி படத்தை தொடர்ந்து ரஜினியின் சூப்பர் ஹிட் படமான படையப்பா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் சீனை அப்படியே காப்பி அடித்து இருக்கின்றனர். படையப்பா படத்தின் அந்த காட்சியில் ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கு ரஜினி செல்லும் போது அவருக்கு உட்கார நாற்காலி இருக்காது. உடனே துண்டை தூக்கி எரிந்து ஊஞ்சலை இழுத்து அதில் கெத்தாக அமருவார் சூப்பர் ஸ்டார். என்ன, இங்கு துண்டுக்கு பதில் லத்தியாலயே ஊஞ்சலை இழுக்கிறார் சத்யா.

Advertisement