நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் இத்தனை கோடிக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்து இருக்கிறார் உதயநிதி – சர்ச்சையை கிளப்பிய சவுக்கு

0
740
- Advertisement -

உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து சவுக்கு சங்கர் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சோசியல் மீடியாவில் மிகப் பிரபலமான நபர்களில் ஒருவர் சவுக்கு சங்கர். இவர் அரசியல் விமர்சகரும், சவுக்கு இணைதள ஆசிரியருமாக இருக்கிறார். பெரும்பாலும் இவர் அரசியல் பிரபலங்களை தாக்கி பேசுவது தான் வழக்கம். இந்த நிலையில் சவுக்கு சங்கர் அவர்கள் உதயநிதி ஸ்டாலின்- நிவேதா பெத்துராஜ் குறித்து விமர்சித்து பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

அதில் அவர், தன் மீது அதிக பொசசிவ் ஆக இருக்கும் ஒரு ரசிகைக்காக உதயநிதி ஸ்டாலின் துபாயில் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சின்ன வீட்டை வாங்கி தந்திருக்கிறார். இது யாருக்காவது தெரியுமா? இந்தியாவில் வாங்காமல் அவர் துபாயில் வாங்கியதற்கு காரணம் அவர் உதயநிதி மேல் ரொம்ப பொசசிவ் ஆக இருக்கிறார். இதனால் இந்தியாவிலேயே அவர் இருக்க கூடாது என்று தான் துபாயில் அவருக்கு வீடு வாங்கி அங்கே வைத்திருக்கிறார்.

- Advertisement -

தமிழகத்திற்கு மாதம் இரண்டு முறை மட்டும் வருவார். வரும்போது மட்டும் உதயநிதியை சந்தித்து பேசுவார். அவர் பெயர் நிவேதா பெத்துராஜ். அவர் பேட்மிட்டன் கூட விளையாடுவார். அவர் தொடர்பான நியூஸ் வந்தால் குணசேகரன் என்பவர் சன் நியூஸில் அந்த செய்தியை போடுவார். மற்ற சேனல்களில் நிவேதா பெத்துராஜ் வரும் தகவல்களை எல்லாம் பகிர மாட்டார்கள். காரணம், உதயநிதி தம்பி சந்தோஷப்பட வேண்டும் என்று இவர் செய்கிறார்.

இப்படி உதயநிதி கோடி கணக்கில் சம்பாதிக்கும் பணம் எங்கிருந்து வருது தெரியுமா? போதை மாபியா கும்பலில் இடம் இருந்து தான் வருகிறது. லஞ்ச பணம் மூலத்திலிருந்து இவ்வளவு கோடியை சம்பாதிக்க முடியாது. ஒரு துளி போதை பவுடர் 7000 ரூபாய் என்றால் கோடி கணக்கில் விற்பனை செய்கிறார்கள். எவ்வளவு என்றே மதிப்பிட முடியவில்லை? என்று பேசி இருந்தார். இப்படி சவுக்கு சங்கர் பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

உதயநிதி குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின் இவர் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நான்கு படங்களை தயாரித்தார். அதனை அடுத்து இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படமே ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

நிவேதா பெத்துராஜ்:

இவர் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மாமன்னன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதேபோல் தமிழில் பிரபலமான நடிகைகளில் நிவேதா பெத்துராஜ் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு போன்ற பிறமொழி படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை

Advertisement