அவருக்கு நயன்தாரா தூக்கிட்டு போக தெரியாதா? சீமானின் சர்ச்சை பேச்சு. இதோ வீடியோ.

0
1759
- Advertisement -

நயன்தாரா குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர், நடிகராக திகழ்பவர் சீமான். அதோடு இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பல ஆண்டு காலமாக இருக்கிறார். மக்களின் நலன் கருதி இவர் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார். இப்படி இவர் அரசியலில் பிஸியாக இருந்தாலும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் சீமான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் முந்திரிக்காடு. இந்த படத்தில் சீமான் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் சீமான் அவர்கள் தேர்தல் சார்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

சீமான் அளித்த பேட்டி:

அதன் பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, சந்தன மரங்கள் தான் பெரிய அளவில் வருவாய் கொடுத்தது. சந்தன மரங்கள் வளர்க்க அரசு முயற்சி எடுக்க வேண்டும். எங்க ஆளு வீரப்பன் இருந்தவரை மரங்கள் பாதுகாப்பாக இருந்தது. ஆனால், அவர் மீது சந்தன மரங்களை வெட்டிட்டாரு, காடுகளை அழிச்சிட்டாரு, யானைகளை கொன்னுடாரு என்று அநியாயமாக பழி போடுகிறார்கள். அவர் இருந்தபோது காடு பாதுகாப்பாக இருந்தது.

வீரப்பன் குறித்து சொன்னது:

அவர் இருந்திருந்தால் காவிரி நிலைமை வந்து இருக்குமா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். சந்தன மரங்களை வெட்டி விட்றாரு ஏத்திக்கிறேன், யானை தந்தங்களை கடத்திவிட்டார் ஏத்துகிறேன். ஆனால் வித்தவாரு காட்டுக்குள்ள இருந்தாரு. வாங்கினவங்க எங்கே இருக்கிறார்கள்? அவர் மரங்களை விற்று காட்டுக்குள்ள பெரிய பெரிய பங்களா கட்டினாரா? காட்டுக்குள்ள சாராயம் காய்ச்சினாரா? புகைபிடித்தாரா? கட்டிய மனைவி தவிர வேறொரு பெண்ணை தூக்கிட்டு போனாரா? நாகப்பாவை கடத்தினவருக்கு நயன்தாராவை தூக்கிட்டுப் போக தெரியாதா? அவர் தமிழன் மாண்போடு வாழ்ந்தவர்.

-விளம்பரம்-

நயன்தாரா குறித்து சீமான்:

அவர் வெளியே வந்து பேசினால் பலரும் சிக்கி விடுவார்கள் என்பதால் தான் அவரை கொலை செய்து விட்டார்கள் என்று சீமான் கூறி இருந்தார். இப்படி வீரப்பனுக்கு ஆதரவாக நயன்தாராவை இழுத்து சீமான் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா.

நயன்தாரா திரைப்பயணம்:

இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல், O2, காட்ஃபாதர், கோல்ட், கனெக்ட் படங்களில் நடித்து இருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் ஜவான். இதை அடுத்தும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement