என் பெஸ்ட்டை கொடுத்தேன், சேனல் எனக்கு மரியாதை கொடுக்கல – செம்பருத்தி சீரியல் முக்கிய வில்லி வேதனை.

0
512
sembaruthi
- Advertisement -

செம்பருத்தி சீரியல் வில்லி ஜீ தமிழ் டிவி மீது புகார் அளித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிப்பவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். இதனால் சின்னத்திரை நடிகர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்தது.

-விளம்பரம்-

ஜீ தமிழில் ஒளிபரப்பான டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் இருந்தது. மேலும், இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கி சில தினங்களுக்கு முன் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை கொண்டு எடுக்கப்பட்டது. மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷபானா நடித்து இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஷாருக்கான் சொன்னதை சூர்யா ஏன் சொல்லவில்லை – ராக்கெட்டரி வசனத்தால் சூர்யாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள். வீடியோ இதோ.

செம்பருத்தி சீரியல்:

கார்த்திக் ராஜ் -ஷபானா இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவலாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இவர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. பின் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலகி விட்டார். இதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். பிறகு இவர் சினிமாவில் நடிக்க போவதாக அறிவித்தார். மேலும், இவருக்கு பதில் தொகுப்பாளர் அக்னி இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சீரியலில் நடிக்கும் நடிகர்கள்:

பின் இவர்களுடைய ஜோடியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து இருந்தார். ஆரம்பத்தில் இருந்து இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றது. சமீபத்தில் தான் அனைவரும் எதிர்பார்த்த கிளைமேக்ஸ் வந்தது. இந்த தொடர் 1420க்கும் மேற்பட்ட எபிசோடு கடந்துள்ளது. மேலும், கிளைமாக்ஸ் எபிசோட் மட்டும் பல மணி நேரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒளிபரப்பாகி இருந்தது.

சீரியலின் கிளைமாக்ஸ்:

இறுதியில் வில்லிகள் நந்தினி, வனஜா ஆகியோர் இறப்பது போல காட்டப்படுகிறது. அகிலாண்டேஸ்வரியும் மரணமடைந்து விடுகிறார். செம்பருத்தி சீரியல் முடிந்தபின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கொண்டாடும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் நடிகர்கள் மற்றும் குழுவினர் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வில்லி நந்தினி ரோலில் நடித்திருந்த நடிகை மௌனிகா தன்னை அந்த ஷோவில் அசிங்கபடுத்தி விட்டார்கள் என ஜீ தமிழ் மீது புகார் கூறியிருக்கிறார்.

நடிகை மௌனிகா கூறிய புகார்:

அதாவது, சீரியலில் என்னுடைய பெஸ்ட் கொடுத்தேன். ஆனால், சேனல் எனக்கு திருப்தி தரவில்லை. மெயின் ரோலில் நடித்த நடிகையை மட்டும் கொண்டாடுகிறார்கள். எனக்கு எந்த மரியாதையும் கொடுக்க வேண்டும் என தோன்றவில்லையா ஜீதமிழ்? என்னை எதற்காக அழைத்தீர்கள். எனக்கு மொமெண்டோ எங்கே? என்னை இன்சல்ட் செய்து விட்டீர்கள். நான் சோகமாக தான் இருக்கிறேன். மக்கள் என்னை ஏற்றுக் கொண்டு என்னை கொண்டாடுகிறார்கள். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement